மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, நவம்பர் 21, 2025

 வணக்கம் நண்பர்களே!

மறுபடியும் முகநூலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது பதிவுக்கு எதைக் கருப்பொருளாக எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது... முதல் பதிவை படித்த நண்பர் ஒருத்தர் கேட்ட கேள்வி.... மின்னலாக வெட்டியது.... அதைத்தான் இப்போது தலைப்பாக எடுத்திருக்கிறேன். 

நண்பர் கேட்டது இதுதான்..... "சரிங்கண்ணா,  டிஜிட்டல் கோல்டு பத்தியும், அதன் பாதுகாப்பு பத்தியும் சொன்னீங்க.... ஆனா தங்கத்தைத் தாண்டி... எங்களுக்கும் சொந்தமாக வீடு இருந்தா.... எப்படி இருக்கும்ன்னு ஒரு ஆசை இருக்கு. ஆனா, இன்றைய நிலைக்கு அதுக்கு சில லட்சங்களாவது தேவைப்படுது. அப்படி ஒரு சில லட்சங்களை என்னால முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையில, ரியல் எஸ்டேட் வகையிலான முதலீட்டு லாபம் எனக்கு எட்டா கனியாத்தான் இருக்குமா.....?" 

இப்படி ஒரு கேள்வி, நான் எதிர்பார்க்காததுதான்.  ஆனால், கேட்டார். அது எனக்கு நியாயமா தோணுச்சு. சரி அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தீவிரமா யோசித்தேன் அப்போ எனக்கு தோன்றின யோசனைதான் இது. 

நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். அண்மை காலமாக, அதுல கொஞ்சம் முதலீடும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். நம்மை மாதிரி  நடுத்தர வருவாய் உள்ள குடும்ப ஆட்களுக்கு இருக்கற முதலீட்டு வழிகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட். ரீட்ஸ்... அப்படின்னும் சொல்றாங்க! அது பற்றி பேச முடிவு எடுத்திருக்கேன். அதைத்தான் இன்னைக்கு நம்ம பதிவுல பார்க்க போறோம்.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் பற்றி விரிவா போறதுக்கு முன்ன அது பத்தி சின்னத ஒரு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு.  

ஏற்கனவே நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்யக்கூடிய ஒரு நபரா இருந்தா,  அது இன்னும் கொஞ்சம் ஈஸியா புரிய வாய்ப்பு இருக்கு. மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டத்துல நீங்க செய்யற முதலீட்டை... பணத்தை பங்குசந்தை பத்தி நல்லா தெரிஞ்ச நிபுணர்கள் மூலமா, சந்தைல புழங்கற பங்குகள்ல முதலீடு செய்யறாங்க...! அதே மாதிரி நீங்க செய்யற முதலீட்டு பணத்தை ரியல் எஸ்டேட்ல முதலீடு செஞ்சா அதுல ஒரு லாபம் வரும். அந்த லாபம் உங்களுக்கு வரும். அதுதான் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட டிரஸ்ட்.  மொத்தமா பணம் போட்டு ஒரு வீடோ... மனையோ... வாங்க முடியாதவங்க இந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம். பேரு பெருசா இருக்குன்னு "ரீட்ஸ்"ன்னு (Real Estate Investment Trust - REITs) சுருக்கி சொல்வாங்க..! 

சரி..., நான் போட்ட பணத்தை எடுத்து ரியல் எஸ்டேட்ல முதலீடு செய்வாங்கன்னா... எந்த மாதிரி இடத்துல முதலீடு செய்வாங்கன்னு நீங்க கேட்டா... நியாயமான கேள்விதான். 

ஒருவர் மொத்தமா ஒரு சொத்தை வாங்க முடியாத சூழ்நிலையில... அதாவது, சில லட்சங்களில் முதலீடு செய்ய முடியாதுங்குற ஒரு ஆளு.... அவர்கிட்ட இப்ப ஆயிரங்கள்ல... இல்லை பத்தாயிரங்கள்ல இருக்கலாம்..... இல்ல அதைவிட கூடவும் இருக்கலாம். ஒரு வருஷத்துக்கு 10 ஆயிரம்ன்னு அவர் சேமிச்சா,  அடுத்த வருஷம் 20,000 இருக்கும். அதை ரீட்ஸ்ல முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃப்ண்ட்ல யூனிட்கள் தர்ற மாதிரி நீங்க போடற பணம் 100 ரூபாயோ... லட்ச ரூபாயோ... அதுக்கு ஏத்த மாதிரி கணக்கிட்டு யூனிட்கள் கொடுத்துடுவாங்க.  அப்புறம், இது மாதிரி பலர் கிட்ட இருந்து வாங்கின பணத்தை எல்லாம் மொத்தமா சேர்த்து... அது பல கோடிகளில் வருதுன்னா... அந்த கோடிகளை எடுத்துட்டு போயி ஒரு சொத்தை வாங்குவாங்க.... அந்த சொத்தை வாங்கி தேவையானவர்களுக்கு வாடகைக்கு விடுவாங்க... வாடகைக்கு விடும்போது, அது மூலமா கிடைக்கக்கூடிய வாடகை வருவாயை..... யார் யாரெல்லாம் ஆரம்பத்துல முதலீடு செஞ்சாங்களோ, அவங்களுக்கெல்லாம் பிரிச்சு கொடுப்பாங்க!

அந்த வகையில நமக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கு. பங்குகளில் முதலீடு செய்தால் டெவிடென்ட்ன்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான். இந்த மாதிரி வருவாய் ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்க வாய்ப்பு இருக்கு. சில நிறுவனங்கள் மட்டும் அதிகமாக வருவாய் பெறக்கூடிய சூழலில்.... இடையில் ஒருமுறையும் டிவிடெண்ட் கொடுப்பாங்க! வாடகையிலயே அவ்ளோ காசு வருமான்னு நீங்க ஒரு கேள்வி கேட்டீங்கன்னா... அது நியாயமான கேள்விதான். வரும்....! எப்போ வரும்ன்னா இந்த பணத்தை நாம எந்த மாதிரியான சொத்து வாங்குவதற்கு பயன்படுத்துறோம்ங்கறதை பொறுத்தது. அதுதான் முக்கியம். 

உதாரணத்துக்கு ஒரு இன்டஸ்ட்ரியல் பார்க்ல..... அதாவது,  இன்னைக்கு மிகப் பெரிய ஆபீஸ் காம்ளெக்ஸ்ல... பாக்குறீங்களே, பல ஐடி நிறுவனங்கள்  பெரிய பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களில் செயல்படறதெல்லாம் பாக்கிறீங்க இல்லையா.... பல பன்னாட்டு நிறுவனங்களோட அலுவலகங்கள் அங்க இருக்கிறத பார்த்திருப்பீங்க! அந்த மாதிரி சொத்துக்களை இவங்க வாங்கும்போது அதுல கிடைக்கக்கூடிய வாடகை வருமானம் கட்டாயம் கூடுதலா இருக்கும். அது மட்டும் இல்லாம, இந்தியாவிலேயே இருக்கக்கூடிய மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், மத்தவங்களுக்கும் கூட லீஸ் அடிப்படையிலும்... அல்லது மாதாந்திர வாடகை அடிப்படையிலும் ஒரு கான்ட்ராக்ட் போட்டுகிட்டு வாடகைக்கு கொடுப்பாங்க. அதனால, அவங்களுக்கு வாடகை ரெகுலரா கிடைச்சிடும். அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. அந்த வருவாயை தான் இப்போ பிரிச்சு கொடுக்குறாங்க.  இந்தியாவுல இப்போதைக்கு பாத்தீங்கன்னா நாலு... அஞ்சு நிறுவனங்கள் இந்தத் துறையில் செயல்படுறாங்க...  அவங்க இந்த மாதிரி வருவாய முதலீட்டாளர்களுக்கு கொடுத்துட்டு இருக்காங்க. 

சரி.... அப்படின்னா அதுல எவ்வளவு வருவாய் வர வாய்ப்பிருக்கு என்பதுதானே அடுத்த கேள்வி... அது மட்டுமில்லை. இந்தியாவுல, இதுமதிரி ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் எப்போது தொடங்கியது என்ற மத்த விஷயங்களையும் அடுத்த பதிவில்  பார்க்கலாம்.