மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், மே 05, 2005

'தராக்கி' சிவராம் படுகொலையை ஒட்டி.....

நண்பர் ஒருவர் 'A Blogger' என்ற பெயரில் அருணா சீனுவாசன் அவர்களின் 'அலைகள்' பதிவில் - திசைகள் மே மாத இதழ் குறித்து எழுதியதில் பின்னூட்டம் இட்டுள்ளார்.

அந்த 'அனானிமஸ்' அவர்களுக்கு பதில் சொல்ல மட்டுமே இந்த பதிவை நான் இடவில்லை. எனது மனசாட்சிக்கும் சில பதில்களைச் சொல்ல வேண்டியுள்ளது.

முதலில் நண்பர் எழுப்பிய கேள்விக்கு பதில். 'ஐயா, எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் குறிப்பிட்டிருந்தபடி தராக்கி சிவராம் அவர்களின் படுகொலை பற்றி எந்தவிதமான ரியாக்ஷனும் நான் காட்டாமல் இருக்கிறேன் என்றவகையில், தாங்கள் அதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்றவகையில்... அதை என் மட்டில் எனது தனிப்பட்ட தவறாக ஒப்புக் கொள்கிறேன். நான் மன்னிப்பு கோர வேண்டும் என்றாலும் தயார். மன்னிக்கவும்.

ஆனால், இதன்பிறகு எனது சில வரி பதிலையும் கேட்பீர்கள் என எண்ணுகிறேன்.

தராக்கி சிவராம் பற்றி நான் அதிகம் தெரிந்தவன் அல்ல. இது, முதல் காரணம். பத்திரிகையாளன் என்றவகையில் ஒருவருக்கு தேவையானது என பலர் சொல்வது - Master of All ஆக இல்லாவிட்டாலும், Jack of all trades ஆகவாவது இருக்க வேண்டும் என்பதே! அந்தவகையில் மதி கந்தசாமியின் தொகுப்பில் சில கட்டுரைகளை படித்து மட்டுமே நான் தராக்கியின் சிந்தனை, வீச்சு பற்றி தெரிந்து கொண்டேன். படிக்க மீதியும் பாக்கியிருக்கிறது. ஒருவேளை இலங்கை அரசியல் பற்றி அதிகமாகவும், குறிப்பாக இலங்கை தொடர்புடைய ஊடகங்கள் வழியாக அதையும் தெரிந்து கொள்பவனாகவும் இருந்திருக்கும் பட்சத்தில், முன்னமே நான் அவரை அறிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி இல்லாமல் போனது இரண்டாவது காரணம். அதுதவிர, நண்பர்கள் சிலரது (மட்டும்) பதிவுகளில் தராக்கி சிவராம் பற்றி இன்னும் கொஞ்சம் தற்போது தெரிந்து கொண்டேன். எனவே எனது அறியாமையும் இவ்விஷயத்தில், நான் ரியாக்ட் செய்யாமைக்கு காரணம். எனது காரணங்கள் பலவும் மற்ற சக பத்திரிகையாளர்களுக்கும் பொறுந்தும் என நினைக்கிறேன்.

மறுபடியும் என் விஷயத்துக்கு வருகிறேன். சக பத்திரிகையாளர்களுக்காக... பத்திரிகை சுதந்திரத்துக்காக... என போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை பல கடந்த காலங்களில் நடந்தபோதும் அவை பலவற்றில் நான் நேரடி பங்களித்ததில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே ஒப்புக் கொள்வதில் எனக்கு சம்மதமே! எனது மானசீக ஆதரவு இவ்வகை போராட்டங்களுக்கு எப்போதும் இருந்துள்ளன. என்றாலும், நானே ஒரு பத்திரிகையாளன் என்றவகையில் இதுவரை நேரடி பங்களிக்காமைக்கு வேறு எந்த காரணமும் இருந்ததில்லை. வேறு முக்கிய அலுவல் இருந்தன என்றெல்லாம் பொய் சொல்ல நான் விரும்பவில்லை. அந்த போராட்டங்கள் பலவும் எனது உளப்பூர்வமாக நியாயமானவைதான் என்றும் அறிவேன். இருந்தாலும் நடந்தவை இவைதான். அதுதான் நிற்கும்.

இப்படி தொடர்ந்து 'பாவ மன்னிப்பு' கேட்டுக் கொண்டு... பட்டியல் போட்டுக் கொண்டு செல்வதில் தற்போது எந்த அர்த்தமுமில்லை. ஆனாலும் இதைக் குறிப்பிட காரணம் மேற்கண்ட பல போராட்டங்களில் - நண்பர் 'A Blogger' குறிப்பிட்டுருந்த பலரும் பங்கேற்றார்கள் என்பதை நான் அறிவேன். மாலன் போன்ற பலர் அதில் சிலவற்றில் முன்னால் நின்று பங்கேற்றனர் என்பதை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தவன். அருணா அவர்களை எனக்கு இந்த வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகுதான் அறிமுகம். எனவே அவரைப் பற்றி தெரியாது. ஆனால் பங்கேற்று இருப்பார் என்பது எனது நம்பிக்கை. எதிர்பார்ப்பு. அண்ணா கண்ணன் போன்ற நண்பர்களும் அப்போராட்டங்களில் பங்கேற்றதாக ஞாபகம். எனவே அந்த போராட்டங்களுக்கும் சேர்த்து நான் குறை சொல்லப்பட தகுதியானவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு வரியில் சொல்வதானால், 'செயலின்மையின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளாத..., யோசிக்காத பொறுப்பின்மை' எனலாம். இப்போது உணர வாய்ப்பு கிடைத்தது. அதை திருத்தி, என்னை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் மற்றபடி, இதர எனது சகோதர பத்திரிகையாளர்கள் பலர் முந்தைய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றவர்கள் என்பதால், இம்முறையும் அவர்களுக்கு தயக்கமோ, மாற்றுக் கருத்தோ இருக்க வாய்ப்பு இருக்காது என்றே நம்புகிறேன்.

செவ்வாய், ஏப்ரல் 19, 2005

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' விபத்து!


நேற்று மாலை சுமார் 7 மணியிருக்கும். நண்பரும், கவிஞருமான வஸந்த் செந்தில் அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அதை 'அறை' என்று சொல்வது சரியா? செந்தில் திருமணமாகாதவர் என்பதால் - அவர் வசிக்கும் வீட்டை (எனது வீட்டுப் பரப்பைவிட அதிகம்) அறை என்றே குறிப்பிடுவது வழக்கம். Bachelorராக, அறை எடுத்துத் தங்கியிருந்தவர்கள் இதன் சூட்சமத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

செந்தில், என்னை ஒப்பிடும்போது நிறையவே இலக்கியம் படிப்பவர். ஓரளவு தேர்ந்த விமர்சகர் என்று, பெயரும் பெற்றவர். 'சாளரம்' என்ற பெயரில் வௌதயான அவரது இலக்கிய விமர்சனத் தொகுப்பு நூல் கவனிக்கப்பட வேண்டிய புத்தங்களில் ஒன்று என்பது எனது கருத்தும். அவரது அறைக்கு எப்போது சென்றாலும், 'புதிதாக என்ன புத்தகம் வந்திருக்கிறது?' என்று பார்ப்பேன். அப்படியான முயற்சியால்தான் நேற்று இந்த விபத்து... அதிர்ச்சி!
பலரது நன்மதிப்பிற்கும், விருப்பத்திற்கும் உரிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் படைத்த, வௌதயானபோது பரபரப்பை கிளப்பிய 'உலக சினிமா' புத்தகம் நண்பரின் மேஜை மீது இருந்தது. அவரது மேஜையில் இருக்கும் வஸ்துகளை உரிமையோடு எடுத்து புரட்டும் சலுகையை, நான் உள்பட சிலருக்கு செந்தில் வழங்கி வருகிறார். அதனால்தான் புத்தக விலையைக் கண்டு கொஞ்சம் பயத்தோடு ஒதுங்கிவிட்ட நான், இப்போது அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். புத்தகம் வௌதயாகி இப்போது 6 மாதங்களுக்கு மேலாவதாக நினைவு. இடைப்பட்ட காலத்தில் சில இடங்களில் அந்த புத்தகம் கண்ணில் பட்டும், எடுத்துப் புரட்ட இயலாத சூழல்.

இந்த புத்தகம் வௌதயான நேரத்தில், விழாவுக்கு எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தனர், புத்தகத்தை வௌதயிட்ட 'கனவு பட்டறை'யினர். நண்பர் ஜெரால்ட் மற்றும் அவரது துணைவி - கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை (மாத்தம்மா, பறை உள்ளிட்ட சில குறும்படங்கள் மூலம் கவனத்தைப் பெற்றவர்) போன்றவர்கள்தான் கனவு பட்டறையின் உரிமையாளர்கள். நண்பர் ஜெரால்ட் எனக்கு நல்ல பரிச்சயம். விகடனில் பணியாற்றியபோதே அறிமுகமானவர். லீனாவின் கவிதைநூல் வௌதயீட்டு விழாவுக்கு அழைத்திருந்தபோது, கவிஞரை ஜெரால்ட் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

'உலக சினிமா'வை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன், லீனாவுக்கு முன்பே எனக்கு பரிச்சயமானவர். எனது மரியாதைக்குரிய நண்பர். அவர் ஒரு முன்னணி எழுத்தாளர் என்றவகையில்விட, ஒரு நண்பர் என்றவகையில்தான் எனக்கு தெரியும். அவரது அட்சரம் பத்திரிகை தொடர்பான சில விஷயங்களுக்காக, எனது அலுவலகத்தில் அவருடன் பேசிக்கொண்ட நாட்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஆஸ்கர் விருதின் 75 ஆண்டு நிறைவை யொட்டி வௌதயான எனது புத்தகமான ''ஆஸ்கர் - 'அ' முதல்...''ஐ நான் விரும்பி சென்று கொடுத்து... பின்னர் கருத்து கேட்டவர்களில் ஒருவர். பலரைப் போல மேம்போக்காக இல்லாமல், புத்தகத்தைப் படித்துவிட்டுதான் பேசுகிறார் என்பதுபோல அவரது விமர்சனம் இருந்தது. அவரது விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, 'இன்னும்...' என்று அவர் எதிர்பார்த்ததாக சொல்ல வந்த விஷயங்கள் குறித்து, எனது பதிலையும் பகிர்ந்து கொண்டேன். நன்றி சொல்லிவிட்டு பிரிந்தோம். இடையில் சில நேரங்களிலும் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு.

செந்தில் அறையில் 'உலக சினிமா' புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது இடையில் மின்னல்! அல்லது அது போல - எனது பெயர், அந்தப் புத்தகத்தில்! கொஞ்சம் அதிர்ச்சி. ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டு மறுபடியும் கவனித்துப் பார்த்ததில் நிஜம்தான். ''ஆஸ்கர் - 'அ' முதல்...'' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை (ஆஸ்கர் விருது வரலாறு) எடுத்து இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார் எஸ்.ரா. அனேகமாக, அந்த 'உலக சினிமா' புத்தகத்தில் ஆஸ்கர் விருது பற்றிய விபரங்கள் வேறு எந்த வகையிலும், எங்கும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை 'இது போதும்' என நினைத்தாரா தெரியவில்லை.

ஆனால், எனக்கு இந்த விஷயத்தில் இரண்டு காரணங்களுக்காக வருத்தம்.

முதற் காரணம் எளிமையானது. மறக்கக்கூடியதும். எனது புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து பயன்படுத்தியிருப்பது குறித்து புத்தகத்தின் உள்ளடக்க உரிமையாளரான எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் இந்த நிமிடம்வரை... ஒரு தகவலாகக்கூடச் சொல்லவில்லை. சில நேரங்களில் கைப்பேசி தகவல் - எஸ்எம்எஸ் போலகூட செய்தியனுப்பலாம். அப்படி எதுவுமும் வரவில்லை. இதற்கு, நான் அவரது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவன் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. எனது அந்த புத்தகத்திலேயே எனது தொடர்பு எண் அச்சிடப்பட்டுள்ளது. அதை அவருக்கு சொல்லிக் காட்டியே நாங்கள் பேசியிருக்கிறோம். அடுத்து, அவர் எனது அலுவலகம் வராதவர் என்று சொல்லிவிட முடியாது. அதைத்தாண்டி புத்தகம் வௌதயான காலத்ததல் 'கனவு பட்டறை' அலுவலகம்கூட, எனது அலுவலகத்திலிருந்து 5 நிமிட நடை தூரம்தான். ஆனால் ஒரு courtesy sakeகூட எஸ்.ரா எனக்கு தகவல் சொல்லாததும், தற்செயல் விபத்துபோல நானே அதை புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொண்டதும் எனக்கு வருத்தம்தான். என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை ஒரு காரணமாக அவர் சொல்வதை எந்தவகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

எனது புத்தகத்திலிருந்து எதையோ எடுத்துக் கையாளும்முன், அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக நான் எதிர்பார்க்கவில்லை - அவர் எனது நண்பர் என்பதால். பரவாயில்லை. பயன்படுத்திக் கொள்ளலாம்தான். ஆனால் பயன்படுத்திய பின்னராவது அதை ஒரு செய்தியாக... தகவலாக எனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் நினைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். நினைக்கிறேன். அதற்காக அவர் என்னைத் தேடி மெனக்கெட வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. பின்னர் எங்காவது சந்திக்கும்போது சொல்லியிருக்கலாம். அல்லது, இந்த புத்தக வௌதயீட்டு விழாவுக்கே நான் சென்றிருந்தபோதுகூட சொல்லியிருக்கலாம்தான். அந்த விழாவிலேயே நானே தேடிச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினேனே அப்போது கூட சொல்லியிருக்கலாம். அன்றைய அவரது busy scheduleல் கூட இரண்டு நிமிடம் என்னுடன் பேசிவிட்டுதான் சென்றார். அப்போதும் கூட அவர் மறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும் பின்னர் இன்றுவரை 6 மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை ஒரு செய்தி இல்லை. என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை.

ஒருவேளை அவர் தொடர்பு கொண்டு தகவல் சொல்லும் அளவுக்கு வேறெதாவது தகுதிகளை எதிர்பார்க்கிறாரா தெரியவில்லை. அப்படி இருக்காது என நம்புகிறேன். அப்படிதான் என்றால்....? என்ன சொல்ல......?

இரண்டாவது வருத்தம். ஆழமானது. மறக்க முடியாததும். 'உலக சினிமா'வில் பயன்படுத்தப்பட்டுள்ள அந்த பகுதிக்கு courtesy credit கொடுக்கும் இடத்தில் புத்தகத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ''ஆஸ்கர் : அ முதல் ஃ வரை - சந்திரன்'' என்று எஸ்.ரா. குறிப்பிட்டுள்ளார். இதுதான் எனக்கு மதகவும் ஆழமான வருத்தத்தைத் தருகிறது. அதாவது, ஒரு புத்தகத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் அதற்கான credit தரும் விஷயத்தில்கூட எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அடுத்து எனது புத்தகத்தையும், அதன் உள்ளடக்கத்தை அவர் அணுகிய வததம், அதை புரிந்த கொண்ட விதம் என பலவற்றில் எனக்கு புதிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார் எஸ்.ரா. இப்படி செய்திருப்பது வேறு யாராவது என்றால் பரவாயில்லை. நான் கண்டு கொள்ளாமல் கூட இருந்திருப்பேன். ஆனால் மதிக்கப்படும் இலக்கியவாதி என்று பெயரெடுத்து வரும் எஸ்.ரா செய்யத்தகுந்த காரியமாக இது எனக்கு படவில்லை.

''ஆஸ்கர் - 'அ' முதல்....'' என்பதற்கும், அதனுடன் ''ஃ வரை'' என்பதைச் சேர்த்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆஸ்கர் விருது - இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் வரலாறு. அதற்கு 'ஃ' போட்டு முடிப்பது முடியுமா? நீண்ட யோசனைக்குப் பிறகு.... பல நண்பர்கள் (மனுஷ்ய புத்திரன் உட்பட), 'தலைப்பை மாற்றினால் பரவாயில்லை' என்று சொன்ன ஆலோசனைகளை மீறி.... வைத்த தலைப்பு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறதோ என்று மறுபடியும் எனக்கு தோன்றுகிறது. நான் என்ன மாதிரி புரிதலை எதிர்பார்த்தேனோ, அப்படி இந்த புத்தகத் தலைப்பு சென்றடையவில்லையோ என்று இப்போதும் நினைக்கிறேன்.

இப்படியான ஒரு courtesy credit மூலம் எஸ்.ரா செய்திருப்பது என்ன? இதே அளவு அசட்டையாகத்தான் அவரது புத்தகமும் தயாராகியுள்ளதா என்ற கேள்வி எனக்கு இப்போது எழுகிறதுதானே? இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. கேட்டிருக்கிறேன். படித்துப் பார்க்க வேண்டும்.

எஸ்.ரா மீது எனக்கு இன்னும் மரியாதை இருப்பதால் இதற்குமேல் நான் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. ஆனால், எனது புத்தகத்தைப் பார்க்காதவர்களுக்கும், எஸ்.ரா.வின் 'உலக சினிமா'வை முதலில் பார்ப்பவர்களுக்கும் தவறான புரிதல் தொடரக்கூடாது என நினைக்கிறேன். அதனால் இதை எழுத வேண்டியுள்ளது.

இதில் இன்னொரு வருத்தம் என்னவென்றால், பதிப்பாளரான நண்பர் ஜெரால்டும் இந்த நிமிடம்வரை இது குறித்த தகவல் எதையும் எனக்குச் சொல்லவில்லை. எஸ்.ரா.வுக்கும் எனக்குமான நட்பு பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால், ஏற்கெனவே என்னிடம் எஸ்.ரா. சொல்லியிருப்பார் என்று ஜெரால்ட் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது அப்படி சொல்லி என்னைச் சாந்தப்படுத்திக் கொள்கிறேன்.

வேறென்ன செய்வது? இதற்குமேலும் நான் வேறு எதாவது கேட்டு வைத்தால் - அது எனது நண்பர் எஸ்.ரா.வுக்கும் அழகல்ல; எனக்கும்தான். ஆனால், இதைகூட கேட்காமல் நான் சும்மாயிருந்துவிட்டால் - என் புத்தகத்திற்கும், அதற்கான உழைப்புக்கும், அதை வௌதயிட்ட பதிப்பகத்திற்கும் நியாயம் செய்ததாகாது. பதிப்பகத்தில் இன்னும் 4 பார்ட்னர்கள் உள்ளனரே!

திங்கள், ஏப்ரல் 18, 2005

'சந்திரமுகி'யின் மறுபக்கம்


'முதலில் வந்தது கோழியா... முட்டையா...?' கதைதான்.

பேய், பிசாசு போன்றவற்றை ஊடகங்கள்தான் இன்னும் உயிருடன் வைத்திருக்க முயல்கின்றனவா? அல்லது, மக்களிடம் (கடவுள்(!)போல எல்லா இடங்களிலும்) - நகர, கிராம, படிக்காத, சில படித்தவர்களிடமும் இன்னும் இருப்பதால்தான் இந்தமாதிரி படம்... சீரியல்கள் எடுக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி.

'சந்திரமுகி'யில் சற்றே முன்னேறிய ஏமாற்று முயற்சி என்று சொல்லலாம். அதாவது, பேய், பிசாசு, பூதம் போன்ற விஷயங்கள் எல்லாம் உண்மை இல்லை; கற்பனை. அல்லது, தேவையற்ற அர்த்தமில்லாத நம்பிக்கை என்று சொல்ல வருவதுபோல முயன்றிருக்கிறார்கள். ஆனால் மக்களது நம்பிக்கையை இரண்டடி மேலேறி இன்னும் பாழ்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, 'Split personality என்று ஒரு விஷயத்தை மனோதத்துவம் சொல்கிறது. அது அறிவியல் பூர்வமானது. அதன்படி சில மாதிரி கோளாறுகளுக்கு (ஒருவருக்கு பேய் பிடித்துள்ளது என்று மற்றவர்கள் நம்பும் நேரத்தில், அவர் எப்படி செயல்படுவாரோ அப்படியும்கூட நடந்துகொள்வது) விளக்கம் அளிக்கலாம்' என்று சொல்லவந்து, அதைச் சரியாகவும் சொல்லாமல்... இறுதியாக வேறு செய்தியை... வேறு தோற்றத்தைத் தருகிறது - சந்திரமுகி.

அண்மைக் காலத்தில் 'விசில்', 'காதல் கொண்டேன்' என இரண்டு படங்களிலும் (நான் பார்த்தவற்றுள் இப்போது எனக்கு வினைவுக்கு வருபவை) இதுபோல ஒரு Psycho விஷயம்தான் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் படங்களில் இல்லாத அளவுக்கு அதீத voilenceசும், கொடுரமும், திரதயேற்றலும், எரிகிற தீயில் எண்ணெய ஊற்றலும் நடந்து - அதை (சுவாரஸ்யத்திற்காகவா?) பேய், பிசாசுவுடன் இணைத்து... இறுதியில் என்ன என்று தௌதவுபடுத்தாமல் ஒரு குழப்பம்தான் இந்தப் படத்தில் மீதி இருக்கிறது.

Psycho Disorder என்பது ஒரு நிஜம். யதார்த்தம். அதை மறுக்க முடியாதது. அவர்கள், ஒருவகையான Handicap உள்ளவர்களாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள். உடல் ஊனம் போல, இது ஒருவித மன ஊனம். உடல் ஊனமுற்றவர்களுக்கு சமூகம் அளிக்கும்... அளிக்க வேண்டிய அத்தனை சலுகை; கரிசனத்தையும் பெற இவர்களும் தகுதியானவர்கள்தான். அதைத் தர வேண்டியது ஆரோக்கிய மனிதர்களான நம் எல்லாரது கடமையும். அதைத் தராவிட்டால் கூட பரவாயில்லை. இன்னும் அந்த குப்பைக் கிளறி... தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் - சீரியல்... சினிமாக்காரர்களிடம் எனது வேண்டுகோள். இது, Real Estate தாதாக்களிடம் நிலமிழந்த அப்பாவிகள் மனநிலை பற்றி யோசித்துப் பாருங்கள் என்று சொல்வது போலக்கூட இருக்கலாம்.

பேய்... பிசாசு... சாமியின் மகிமை என்று திரையில் வரும் கிராபிக்ஸ் வித்தைகளை - எதோ ஒரு சக்தியின் செயல் என்று... இல்லாத ஒன்றை மக்கள் நம்பியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அதற்கு அறிவியல் பூர்வ விளக்கமும் இருக்குமோ என்பது போன்ற பாவனையை உண்டாக்கி, அதனால் அதை நம்பிவிடக்கூடாது. விழிப்புணர்ச்சி குறைந்த ரெண்டுங்கெட்டான் ஆட்களையும், சந்தேகத்தில் இருந்தவர்களையும், 'சந்திரமுகி' படக் காட்சிகளை வைத்து - அறிவியல்படியும் இது சாத்தியமோ என்று நம்ப வைத்து.. அதன்மூலம் இன்னும் அதிகமான பாதிப்புகளை உண்டாக்கக் கூடாது.

நோய் என்ன என்று கண்டுபிடித்து அதற்கேற்ப மருத்துவம் செய்வதுதான் சரி. Psycho disorderகளுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் ததரைப்பட மருத்துவங்கள் எப்படியும் இருக்குமா? Split Personality என்ற குறைபாடு உடையவர்களுக்கு 'சந்திரமுகி' படத்தில் தரப்படுவது போல கூட மருத்துவம் தர முடியுமா?

நிஜத்தில் - அது மருத்துவமா? பேய் ஓட்டலா? அல்லது, பேய் ஓட்டுவதை மருத்துவம் என்ற இன்னொரு போர்வை கொண்டு மூடியிருக்கிறார்களா? அதோடு, 'இப்படத்தில் ஜோதிகா' போல, split personality கொண்ட ஒருவர் நடந்து கொள்ளக்கூடுமா? அல்லது, இவை திரைப்படத்திற்கான மிகையாக்கலா?

நான் Psycho தொடர்பான நிபுணன் அல்ல. சாமானியன்தான். ஆனால் கொஞ்சமாச்சும் தெரிந்து வைத்திருக்கும் Psychology வகையில் split personalityகள் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றால், 'அபத்தம். முட்டாள்தனம்' என்றுதான் சொல்வேன். ஒருவேளை இப்படியான 'சாத்தியங்களும் உண்டு' என்றால்கூட, அதைத் திரைப்படமாக்கி... அதுவும் ரஜினி போன்ற பிரபலமான நடிகரின் படத்தில்... எதிர்பார்ப்புகளின் எல்லையை முடிந்த மட்டும் தொட்டுவிட்ட படங்களில் காட்சியாக்குவது - split personalityகளுக்கு நாம் செய்யும் துரோகம். மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கு சற்று கூடுதலாக உப்பும், எண்ணெய் பொருட்களும் சேர்த்து சமைத்துக் கொடுப்பதுபோல என எண்ணுகிறேன். இப்படி செய்வதால் பிரச்னை அவர்களுக்கு மட்டுமல்ல; இந்தியா போன்ற ஒரு தௌதவு குறைவான நாட்டில் ஒரு split personality இருக்கும் குடும்பங்களில் இது போன்ற படங்களைப் பார்த்துவிட்டு 'இப்படியும் நடக்க வாய்ப்புண்டோ ' என்று நம்பிவிட வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் இது போன்ற குடும்பங்களில் இன்னும் அதிக பீதியும் பயமும் கூடி அவர்களது குடும்ப வாழ்வு இன்னும் சிக்கலாகிவிடும்.

எனது, அச்சு ஊடக நண்பர்களுக்கு இதன்மூலம் ஒரு வேண்டுகோள் - சந்திரமுகிக்கு விமர்சனம் போடுங்கள். ஆனால் கூடவே அடுத்த வாரங்களிலாவது - தேர்ந்த psychology தெரிந்த... படித்த நிபுணர்களை... பேட்டி கண்டு, ''Split persoanlityகள் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வார்களா? அல்லது வாய்ப்புகள் உண்டா? இதுவரை அவர்களது அனுபவத்தில் கண்ட வித்தியாசமான அனுபவங்கள்?'' என்று கேட்டு கொஞ்சம் விரிவாகவே எழுதுங்கள். இது உங்களது அடுத்தத் தலைமுறைக்கும் கூட புண்ணியம் சேர்க்கும்.

திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய உடனே, ஆற்றாமையினால் அதே வேகத்தில் இதை எழுதி முடித்தேன்.

பின் குறிப்பு : வர்த்தக ரீதியில் மட்டும் எடுக்கப்பட்ட, முழு பொழுதுபோக்கு நோக்கிலான படம் என்ற வகையிலும்கூட, சந்திரமுகி 'தவறவிடக்கூடாதது' என்று வகைப்படுத்த ஏற்ற படம் அல்ல. ரஜினி படங்களின் அத்தனை அபத்தங்களுடனான இன்னொரு படம். கூடுதலாக இந்த விஷமும் கலந்துவிட்டிருக்கதறது. அவ்வளவே!

செவ்வாய், ஏப்ரல் 12, 2005

அல்வாசிட்டி விஜய்க்கு வந்த ஆபத்து

வழக்கமா சீரியஸ் மேட்டர் பேசும் சந்திரன், இந்த தலைப்புல பொது தொண்டுல இறங்கிட்டாரோ? அப்படி என்ன சீரியஸ் விஷயம் இதுல பேசப் போறாருன்னு ஆர்வமா வந்தவங்களுக்கு ஸாரி! ஜூட் வுட்டுக்கலாம்.

இந்த ஆள் எப்பவும் இப்படித்தான். இதுவும் எதாவது கனமாகத்தான் இருக்கும் ஓடிப் போக நினைப்பவர்கள் ஒரு நிமிஷம் ஸ்டாப்!

நான் வெயிட்டீஸ், சொல்லாம ஓய்வுக்கு போய்ட்டேன். அதனால் இப்ப light subjectதான். பெரிதாக எதிர்பார்த்தவர்கள் இப்ப ரெண்டாவது முறை சொல்றேன். கழண்டுக்கலாம்.

இன்றைய நிலையில் பேச நிறைய சீரியஸ் சப்ஜெக்ட்கள் என்னவோ இருக்கின்றன. அதைப் பற்றி பேச ஆசையும் கூட இருக்கு! ஆனால் டைமும், கூடவே மனமும் உதைக்குது. ஒத்துழைக்க மறுக்குது. ஒவ்வொன்றிலும் சில விஷயங்களையாவது verify பண்ண வேண்டியிருக்கு! அப்படியில்லாமல் நினைவில் கொண்டதை எழுத மனமில்லை. தகவல் தவறாகிவிடக்கூடாதே!

இப்போது எழுதுவதானால் 1. சீன - இந்திய நட்புறவு பற்றி, கடந்த கால கசப்புணர்வு, போர் பற்றி, நேருதான் ஆரம்பத்திலேயே திபேத் விஷயத்தையொட்டி அசட்டையாக இருந்து, போர் வரும் அளவுக்கு காரணமாகிவிட்டார் என்றிருக்கும் கருத்து பற்றி... இப்படி பல பதிவுகள் போடலாம்.

2. உச்ச நீதி மன்றத்தில், 'தேர்தலின்போது யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்றே ரகசிய வாக்குபதிய அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு நேற்றுதான் அனுமதித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் இதற்கு ஆதரவாக கருத்து சொல்லியிருக்கிறது. இந்தமுறை அமலானால் அதன் சாதக பாதகம் பற்றியும் விவாதிக்க விருப்பம்.

3. அடுத்து முஷாரப் இந்திய பயணம், ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் அவரைச் சந்திக்க இருப்பது...

இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எதைப் பற்றியும் எழுத மனது ஒத்துழைக்க மறுப்பதால்.... அதை கொஞ்சம் விளையாட அனுமதித்து இந்த பதிவு.

இதன் உள்ளடக்கம்கூட விஜய்க்கு பின்னூட்டமாக போட தயாரானதுதான். பின்னர் மனம் மாறிவிட்டேன்.

***

சென்னை வலைபதிவர்களின் கடற்கரை சந்திப்புக்கு போய் வந்ததிலிருந்து இதை எழுதணும்னு நெனச்சேன். ஆனா ஒன்னு... ரெண்டு.... ஒப்தறதுக்கு (அப்படின்னா என்னா என்று யாராவது கேட்டால் உதைப்பேன். வயதானவர்களானால் சபிப்பேன் ;-) எங்க பாட்டி தாத்தா சொன்னாங்க... நானும் சொல்றேன்) மூணுன்னு (ஐகாரஸ் பிரகாஷ், நாராயணன், அண்ணாகண்ணன்).... மூணு பேர் அதைப்பற்றி எழுதிவிட்டதால் நான் எழுதவில்லை. அல்லது எழுத விஷயமில்லை.

'அப்படியா? இருக்காதுங்க! விஷயம் எதாவது இருக்கும். எதையாவது தோண்டி பாருங்க!' என்று மனது விடமால் நச்சரிக்க... தேடிப் பார்த்ததில் இது போன்ற நிறைய விஷயங்களை நீங்களெல்லாம் இழந்து விட்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சியானேன். அதுக்கு நான்தானே பொறுப்பு! சரி விஷயத்துக்கு வருகிறேன்.

தமிழ் சினிமா பாடல்களை போட்டுத் தாக்கிக்கிட்டு இருக்கும் நண்பர் விஜய் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கறது நல்லது! நல்லவேளை அறிவியல் சமாச்சாரங்கள் எழுதுறேன்னு இப்ப கொஞ்சம் திசை திரும்பப்போய் தப்பிச்சாரு! அப்படியில்லாம தொடர்ந்து ஏடாகூடமாக இருக்கும் தமிழ் சினிமா பாடல்களின் ஆசிரியர்களை விமர்சித்து அவர் தொடர்ந்து எழுத முனைந்தால்.... என்னவாகும்?

தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமால்.... (அதாவது உங்களுக்கு... எனக்கு... இன்னும் நம்மைப் போல பலருக்கு) தமிழைக் கொல்றாங்கன்னு அவர் போக்குல போட்டு தாக்க, பின்னாடி 'இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அது தெரியலன்னா சும்மா கிடக்கோணும்... இப்படி எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசிட்டு அலையக்கூடாது'ன்னு யாராவது மெயில் போட்டா? மெயில் போட்டா கூட பரவாயில்லை. விஜய் செய்ய போறதா சவடால் விட்டுக் கொண்டிருந்தபடி... இவரையே வெட்ட வந்தா.... ? ('ரொம்ப நல்லதா போச்சு! அறிவியல் அது, இதுன்னு எழுதி, நம்ம கழுத்தறுக்கமா இருப்பாரில்லையா?'ன்னு பாலு மணிமாறன் சொல்றது யார் யாருக்கு கேக்குது!)

'அப்படி என்னத்தை அங்கன பேசிக்கிட்டீங்கன்னு சொல்லாம.... வெட்டிக் கதைதானே ஓடுது'ன்னு யாரும் கேக்கறதுக்கு முன்னாடி...., மறுபடியும் ஒருமுறை விஷயத்துக்கு வரேன்.

''மாறுகோ... மாறுகோ... மாறுகையி.... ஜோருகோ... ஜோருகோ.... ஜோருகையி!'' பாடல் ஞாபகமருக்கா?

இதில் 'மாறுகோ' என்ற வார்த்தை என்ன மொழி... அதற்கு என்ன அர்த்தம் என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் ஓகே! அப்படியில்லாமல் என் போல எல்லாருக்குமே இந்த சந்தேகம் இருந்தால்... அதைப் பற்றி ஒருவேளை விஜய் எழுதப்போய்... ஆமாங்க, இங்கதான் பிரச்னையே!

கடற்கரை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது 'இயற்பியல்' போன்ற வார்த்தைகளை தமிழுக்கு தந்த (நம் வலைபதிவர்களில் ஒருவர்) இராம.கி அவர்களிடம், 'Marketing' என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான 'தமிழ் சொல்' என்ன என்று பேச்சு வர, அவர் 'மாறுகொள்'தான் சரியான வார்த்தை என்றார். சந்தைப்படுத்தலை அவரிடம் சந்தைப்படுத்த முடியவில்லை. பாரதியாரும் கூட தனது 'சிந்து நதியின்....' பாடலில், 'மாறுகொள்ளுவோம்' என்று பாடியிருக்கிறார் என்று தொடங்கி பெரிய பிரசங்கமே நடத்திவிட்டார். இவ்விடம் 'மாறுகொள்ளுவோம்' என்பது 'பண்டமாற்று வகையில் பரிமாற்றிக் கொள்வோம்' என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் Marketing பணியில் நடப்பது. அதனால் மாறுகொள்ளுதல் என்பதுதான் Marketingக்கு சுத்தமான தமிழ் வார்த்தை என்று வாதிட்டார்.

இப்போது கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு விளையாட்டுக்கு வாருங்கள். (மூன்றாவது முறையும் 'விஷயத்துக்கு வாருங்கள்' என்று சொன்னால் என்னை வெட்ட வருவீர்கள்தானே!) 'மாறுகொள்' என்பதை ஆணையிடும் தொனியில் பயன்படுத்தும்போது 'மாறுகோ...' என்று குறிப்பிடலாமில்லையா? அப்படித்தான் மேற்கொண்ட பாடலும் எழுதப்பட்டுள்ளது. அது சுத்தமான தமிழ் வார்த்தைதான் என்று யாரும் வாதிட்டால்....

அதற்காகச் சொல்கிறேன் விஜய்! ஒரு பாடலை விமர்சிக்க நினைக்கும்முன் எதற்கும் ஒருமுறை அதை இராம.கி அவர்களைப் போன்ற தேர்ந்த தமிழ் அறிஞர்கள் யாரிடமாவது கொடுத்து Check செய்து கொண்டபின் விமர்சிக்கத் தொடங்குவது நல்லது.

உயிர் காப்பான் தோழன் என்பார்கள்... ஆஹா.... விஜயின் உயிருக்கு வர இருந்த ஆபத்திலிருந்து அவரைத் தடுத்துக் காப்பாற்றிய நான் அல்லவா நல்ல தோழன். என்ன விஜய்! சரிதானே! காலாகாலத்துக்கு எனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறீர்கள்தானே!

என்னப்ப! இதைக்கூட நானே சொல்ல வேண்டியிருக்கு!

சனி, ஏப்ரல் 09, 2005

25 வயது பா.ஜ.க.வும் என் அனுபவமும்

தனக்கு 25 ஆண்டுகள் முடிந்ததை இந்த வாரத்தில் பா.ஜ.க. வெற்றிகரமாக (!) கொண்டாடியது.

பாராளுமன்ற ஜனநாயகம் என்றான பிறகு ஒரு அரசியல் கட்சிக்கு.., அதிலும் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுவிட்ட கட்சிக்கு, ஆளுங்கட்சிக்கு இணையான அந்தஸ்த்தை தந்துதான் ஆகவேண்டும். அந்தக் கட்சியை பிடித்திருக்கிறதோ இல்லையோ, அதன் தலைவர்கள் நம்பிக்கையளிக்கிறார்களோ இல்லையோ, அதன் கொள்கைகள், திட்டங்கள் ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ... ஆனால் பிரதான எதிர்க்கட்சி என்றானபின் அந்த கட்சியை அலட்சியப்படுத்திவிட முடியாது; கூடாது என்பதுதான் உண்மை. இது, இன்றைய நிலையில் பா.ஜ.க.வுக்கு வாய்த்திருக்கிறது. நேற்று-காங்கிரஸ். நாளை-யாரோ!

தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்... ஆந்திரத்தில் என்.டி.ஆர், அஸ்ஸாமில் மகந்தா இப்படி! ஆனால் தேசிய அளவில், பல மாநிலங்களில் தனது இருப்பை உணர்த்தி, தனித்தில்லாவிட்டாலும் கூட்டணிக்கு தலைமையேற்று கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி செய்யும் வாய்ப்பு பெற்றது பா.ஜ.க. இதன் 25 ஆண்டுகால ஆயுளுக்குள்.

1980ன் முதல் காலாண்டில்தான் பா.ஜ.க. என்ற பெயரில் முறையாக இந்த கட்சியைத் தொடங்கினார்கள். ஆனால் அப்போதே இந்தக் கட்சியின் தலைவர்கள் பலர், பழுத்த அரசியல்வாதிகள். வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் அப்போதே முன்னாள் மத்திய அமைச்சர்கள். எமர்ஜென்ஸிக்கு பிறகு, 1977ல் நடந்த தேர்தலில் 'ஜனதா கட்சி' என்ற பொது பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆலோசனையில், மொரார்ஜி தேசாயை பிரதமராகக் கொண்டிருந்த அந்த அமைச்சரவையில் மந்திரிகள்.
ஆனால் அந்தக் கட்சிக்குள் பிரதமர் பதவியைப் பிடிப்பதில் சரண்சிங், ஜெகஜீவன் ராம் போன்ற இன்னும் பலருக்கு இருந்த போட்டியில் - 'ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் இருப்பது' என்றது சிக்கிக்கொள்ள... வில்லங்கம் தொடங்கியது.

யார் பிரதமர் என மல்லுக்கு நின்றபோது... ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து ஒன்றாக இருக்க வேண்டுமானால் - 'ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் தகுதியை துறக்கவேண்டும்' என்பதை மறுத்த பழைய ஜனசங்கம் உறுப்பினர்கள் அப்படியே ஒதுங்கிபோய் உருவாக்கியதுதான் பா.ஜ.க. அதாவது, பாரதீய ஜனசங்கம், பாரதீய ஜனதா என்றானது.

இன்றைய பா.ஜ.க. தலைவர் எனக்கு அறிமுகமான 1977 தேர்தலின்போது நான் பள்ளிக்கூட மாணவன். அரசியல் அதிகம் தெரியாது. ஆனால் ஆர்வம் உண்டு. இப்போது போல அல்லாமல் - அப்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கினால் இரண்டு... மூன்று நாட்கள் கூட ஆகும் இறுதிநிலை தெரிய. அதுவும் சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை என்று தொடங்கிவிட்டார்களானால் தாவு தீர்ந்துவிடும்.

என் அப்பா அரசு ஊழியர்தான் என்றாலும், அதி தீவிர தி.மு.க. அனுதாபி. (பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், எனது கடும் அதிருப்திக்கு இடையில் நகராட்சி மன்ற உறுப்பினராக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைக் கண்டவர். அது தனிகதை) அப்போது திமுக, காங்கிரசை எதிர்த்ததால் 'மிசா' கணேசன், (அந்தப் படம் அப்போது கொடுத்ததுதான்) ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் எல்லாம் சிறையில் அடி, உதை வாங்கி திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தில் எங்களது தொகுதிக்கே...ஊருக்கே வந்தார்கள். (ஆற்காடு வீராசாமியின் நெருங்கிய உறவினர் எனது தந்தையின் ஆத்ம நண்பர், எனக்கு ஆசான். அதோடு, முந்தைய திமுக ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்த புலவர் கோவிந்தன் எமக்கு தூரத்து உறவினர்; என் பாட்டன் முறை) இதனாலெல்லாம் எப்படியும் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் (ஜனதா ஜெயிக்கவேண்டும் என்றல்ல) தேர்தல் முடிவுகளுக்காக வானொலிப் பெட்டியைத்தான் நம்பி காத்துக் கிடப்போம். அப்போது டிவி பார்த்ததேயில்லை. நடு இரவில் 1 மணி, 2 மணி... என ஒருமணிநேர இடைவௌதயில் சொல்லப்படும் செய்திகளுக்கு தூக்கம் கலைந்து எழுந்து அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தந்துவதே, ராஜ் நாராயணன் (அதான் இந்திராகாந்தி போட்டியிட்ட தொகுதி) போன்றவர்களது தொகுதி முடிவுகளை கேட்டு, அப்பாவின் சந்தோஷத்தை பார்த்து, அதில் பாதியை வாங்கிக்கொண்டு நானும் குதித்திருக்கிறேன். அப்படி எனக்கு அறிமுகமானவர்தான் அத்வானி. இன்றைக்கு பா.ஜ.க.வை மறுபடியும் ஆட்சிக் கட்டிலுக்கு அருகில் அழைத்துவரவேண்டிய பொறுப்பைச் சுமப்பவர்.

அப்போது, எனக்கு வாஜ்பாயைத் தெரியாது. பின்னர் மொரார்ஜி அமைச்சரவையில் மந்திரியான பிறகுதான் அவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அப்போது கூடுதலாக தெரிந்துகொண்ட இன்னொருவர் சாந்திபூஷன் - சட்ட அமைச்சர். (இந்திரா மீது நடத்தப்பட உள்ள கேஸை எப்படி கொண்டு செல்வார் என்பதால், அவரைப் பற்றி அப்பா பேசுவார்) ஆனால் அந்த 'அரசியல் அறிவொளி'ச் சுடர் எனக்கு நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து கிட்டவில்லை. ஒரு கும்மிருட்டு சூழ்ந்து கொண்டது. என் அப்பாவுக்கு தி.மு.க. விஷயங்கள்தானே முக்கியம். அதனால் பதவிப் போட்டியில் ஆட்சியை கை நழுவவிட்டார்கள் என்பது தெரிந்ததே தவிர மற்ற விபரங்கள் அப்போது எனக்குத் தெரியாது.

அரசியல் மதிப்பீடுகள் செய்வதில் அமெச்சூர்தனமில்லாமல் திறமையாக செயல்பட கூடியவரான கருணாநிதி, அடுத்து 1980 தேர்தல் வந்தபோதே 'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!' என்று அழைத்து விடுத்துவிட்டார். இந்தமுறை 'காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும்' என்ற எதிர்பார்ப்பில் - வானொலி நடுஇரவு தேர்தல் முடிவு அறிவிப்புகள். 'ஏன் அதற்குள் கட்சி மாறிவிட்டீர்கள்?' என்றெல்லாம் என் அப்பாவை நான் கேட்கவும் முடியாது. கேட்டால் பதிலும் கிடைக்காது; வேறென்று கிடைக்கும். அதைச் சொல்லி, இப்போது உங்களுக்கும் அழுவாச்சி வரவழைக்க எனக்கு விருப்பமில்லை.

இந்த 1980 தேர்தல்களின் அரசியல் 'தோல்வி தூசி' அடங்க எடுத்துக்கொண்ட நேரத்தில்தான் பா.ஜ.க. உதயமாகிறது. ஜனதாவின் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சிலரும், தோல்வி கண்ட பலரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் தகுதியை கைவிட மனமில்லாமல்தான் ஜனதாவை துறந்து, பா.ஜ.க.வில் இணைந்தனர். இது, இந்துமதவாதக் கட்சி என்று அப்போதே பெயர் உண்டு. பழைய ஜனசங்கத்தினர்தானே! அதேபோல சிக்கந்தர் பந்த் என்ற மூத்த முஸ்லீம் தலைவர் ஒருவர் அப்போதே பா.ஜ.க.வில் இருந்ததாக ஞாபகம்.

அப்புறம் மற்றவர்கள் இருந்த ஜனதாக்கட்சிக்கு சந்திரசேகர் (பின்னாளில் பிரதமரானவர்) தலைவர். (எனது மாமா ஒருவர், இவரது அபிமானி. பாரத் யாத்ரா என்று அவர் [வெட்டித்தனமாக (!)] கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியபோது அவரை மகாத்மா காந்திக்கு இணையாக எங்களிடம் எடுத்துப் பேசுவார்) ஆனால் எதிர்க்கட்சிகளாக இந்த இரண்டுமே பெரிய அளவு பலம் பெற்றவை இல்லை. தென்னிந்தியாவில் அப்போது பா.ஜ.க. சுத்தமாக கிடையாது. கர்நாடகத்தில், தமிழகத்தில், கேரளாவில், ஆந்திராவில் எல்லாம் பழைய காங்கிரஸ் (காமராஜர் சிஷ்யர்கள்தான்) ஆட்கள்தான். அவர்களும் ஜனதாவில் இருந்தனர்.

குஜராத், ஓரளவு உ.பி. ம.பி., ஹி.பி, ஓரளவு ராஜஸ்தான், தில்லி போன்ற இடங்களில் பா.ஜ.க. வலுவாக இருந்தது. குவாலியர் ராஜ்யத்தின் முன்னாள் மகாராணி அப்போது பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர். ராஜ்மாதா என்றுதான் சொல்வார்கள்.
இந்தச் சூழலில் பொற்கோவில் - நீல நட்சத்திர நடவடிக்கை எதிரொளியாக 1984ல் இந்திராகாந்தி கொல்லப்பட, அந்த சோகத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்த தேர்தலை நடத்திவிட்டார் இடைக்கால பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ராஜீவ்காந்தி. அப்போது பானியாக்கள் என்று அழைக்கப்பட்ட வடநாட்டு வணிக குலத்திடம் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சி பா.ஜ.க. என்று சொல்வார்கள். நாடு முழுக்க அடித்த அந்த சூறாவளியில் பானியாக்கள் ஆதரவெல்லாம் காற்றில் பறக்க, பா.ஜ.க.வுக்கு இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி கிட்டியது. அதில் ஒருவர் வாஜ்பாய். லக்னோவில் வென்றதாக ஞாபகம். அப்போதுதான் அவர் எனக்கு நன்றாக பரிச்சயமாகிறார். அதாவது அவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. Comes under watchlist.

ஆரம்பத்தில் மிஸ்டர் க்ளின் என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்ட ராஜீவ் (இப்போதுபோல, ஏராளமான சின்னத்திரைகளோ, மற்ற வகையில் ஊடக மட்டத்தில் போட்டியோ, பரபரப்போ அப்போது கிடையாது) பல மாநிலங்களில் வரிசையாக ஒப்பந்தங்கள் செய்து - (பஞ்சாபில் லோங்கோவால்; அஸ்ஸாமில் மகாந்தாவுடன்; காஷ்மீரில் பாருக் அப்துல்லாவுடன்...) 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் செல்லும் பிரதமர் என்று பேசப்பட்டார். சாம் பிட்ரோடா இந்தியாவை எங்கேயோ அழைத்துச் செல்லப் போவதாக சொல்லி கனவுகளை உண்டாக்கினார். இந்த நேரத்தில் நான் கல்லூரி மாணவன். கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் இதுகுறித்து கார்ட்டூன்கள் போட்ட ஞாபகம் இருக்கிறது. இப்போது நம்மைத் தலை சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் VAT பற்றி அப்போதே ராஜீவின் நிதியமைச்சர் வி.பி.சிங் தனது பட்ஜெட் உரையில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

அடுத்து ஷபானு என்ற முஸ்லீம் பெண்ணின் தலாக் விவகாரத்தில் அவருக்கு சார்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னபோது பாஜகவினர் கொண்டாடினர். ராஜீவ்காந்தியும் கூட ஆரம்பத்தில் அதை ஆதரித்து.... பின்னர் தங்களது முஸ்லீம் ஓட்டுவங்கி போய்விடும் என்று யாராவது சொன்னார்களோ என்னவோ பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். அதாவது முஸ்லீம்களின் மத நம்பிக்கை தொடர்பான (Persoanal law affairs) விவகாரங்களில் இந்திய நீதிமன்றங்கள் தலையிடாது. அவ்வளவுதான்! பாஜகவினர் வானத்திற்கும் தரைக்கும் குதித்தனர். இந்தியாவில் ஒரேமாதிரியான சட்டம் (Common Civil code) வேண்டும் என்ற கூச்சல் கூரையை பிய்த்துக் கொண்டு அலறியது. பாவம் ராஜீவ்காந்தி! கொஞ்சம் பயந்துவிட்டார் போல! எங்கே தங்களது இன்னொரு முக்கிய வாக்கு வங்கியான வட நாட்டு பிராமணர்கள் ஓட்டுவங்கி போய்விடுமோ என்று அவர்களைத் திருப்திபடுத்த அதுவரை அனுமதிக்காமல் - நீதிமன்றத்தின் ஆளுகைக்குள் இருந்த ராமர் கோவில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து அங்கு பூஜை செய்து கொள்ள வழிவிட்டார். அப்போதுதான் பா.ஜ.க. தனது அரசியல் பிழைப்புக்காக ராமஜென்ம பூமி பிரச்னையை முதலில் உரக்க பேசத் தொடங்கியது. ஐடியா கொடுத்தது ராஜீவ் காந்திதான் என்றால் நான் தலையாட்டுவேன்.

கால ஓட்டத்தில் காட்சிகள் மாற, வி.பி.சிங், ராஜீவை விட்டு விலகி போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு வௌ஢ளத்தால் எதிர்க்கட்சிகளின் ஹீரோவாகிவிட்டார். ஒருவேளை வி.பி.சிங் மாதிரி ஒரு வலுவான சின்னம் அப்போது காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்திருக்காவிட்டால் பா.ஜ.க. இன்னும் முன்னதாகவே தலை உயர்த்தியிருக்கும் என்பது என் இப்போது என் கருத்து. ஆனால் வி பி சிங் வந்ததால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. ரேஸில் பின்தங்கிவிட்டது. 1989ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிட்டவில்லை.

ஜனதா தளம் வேட்பாளராக பிரதமருக்கு முன்னிருத்தப்பட்ட வி.பி.சிங்குக்கு பா.ஜ.க.வும், கம்யூனிஸ்டுகளும் வௌதயில் இருந்து ஆதரவு தர... 'ராஜா சாகிப்' மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ராஜா சாகிப்' ஆகிறார். அதாவது பிரதமராக பொறுப்பு ஏற்கிறார். ஆனால் ராஜா வம்சத்தில்.... அந்த தோரணையோடு வளர்ந்தவர் - பிரதமரானதும் கூட மற்றவர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதே என்ற உறுத்தல் காரணமாகவோ என்னவோ தனக்கென தனி ஓட்டு வங்கியை உருவாக்கிக்கொள்ள திட்டமிட்டு விரைவிலேயே 'மண்டல் கமிஷன்' பரிந்துரையை செயல்படுத்த அறிவிப்பு வௌதயிட்டார்.

அதுதான்.. அதுதான் சரியான தீப்பொறி என சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் வீரிய... வீர வரலாறு இங்கேதான் தொடங்குகிறது. அதற்கு முன்பு எல்லாம் பாலகன் வாழ்க்கை.

- தொடரும்

கையைக் கடிக்காமல் டேட்டிங் போகணுமா?

புத்தாண்டு வருதே! அதாங்க.... தமிழ் புத்தாண்டு!

அப்ப அம்மணியைக் கூட்டிக்கிட்டு டேட்டிங் போகற எண்ணம் இருக்கா? அப்படின்னா, சும்மாவே கூட்டிப் போக முடியுமா? பரிசு கொடுக்கலீங்களா?

பாலு மணிமாறன், வசந்தன், அல்வாசிட்டி விஜய் போன்ற பலர் மீசை விஷயத்துக்கு எவ்வளவு நேரமும், சிந்தனையும் செலவிடுகிறார்கள்... அதன் பின்னணி என்ன என்றுதான் படித்திருப்பீர்களே!
இவர்களைப் போலவே இன்னும் உள்ள இளசுகளுக்கு, விருப்பமானவர்களை கூட்டிக் கொண்டுபோய் புத்தாண்டு கொண்டாடினால் என்ன செலவாகும்?

கல்யாணமானவர்கள் டேட்டிங் போகக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் மனைவியையும் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு என்னைப் பொறுப்பாக்கக் கூடாது. ;-) சரி... இளசுகள் விஷயத்துக்கு வருவோம்.
பாவம், அவர்கள்! பட்ஜெட் பெரிசாகி, கடன் வலையில் சிக்கக்கூடாது என்பதற்காக இங்கே சில டிப்ஸ். இது நீங்களே எழுதி கொடுக்கற டிப்ஸா.... எங்காவது மண்டபத்தில் கொடுத்ததை எடுத்து வந்து கொடுக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டு நச்சு பண்ண மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.
இங்கே உங்களுக்கு இதை Serve பண்ணும் எனக்கு உண்டான டிபஸ்ஸை 'கனமாக' வைத்துவிட்டு (வேறென்னங்க! அப்பப்ப என் வலைபதிவுக்கு வந்து, கீழே உள்ள நட்நத்திரத்தில் ஒரு குத்துவிட்டு... மனதில் தோன்றும் எதையாவது எழுதிப் போட்டுவிட்டு போக வேண்டும்.) மேலே செல்லலாம்.

டிப்ஸை வெச்சிட்டீங்களா?

இப்ப இதை கிளிக்கி உள்ளே போங்க! என்ஜாய் பண்ணுங்க! All the best!



ஹி...ஹி.... ஆமாம்! டிப்ஸ் உரிமை : Rediff வலைதளத்துக்கு!

தமிழ் வலைபதிவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

நல்லவேளை! இன்றைக்கு அலுவலகத்திலிருந்து விடைபெறும் நேரத்தில் தோழி ஆதிரை அவர்களின் வலைபதிவுக்கு வந்தேன். அப்போதுதான் இந்த அசம்பாவிதத்தைக் கண்டேன்.

'சந்திரன்' என்ற பெயரில் இங்கே ஒருவர் பின்னூட்டம் விட்டிருக்கிறார். அது நானல்ல. அதாவது, 'நாலாவது கண்' என்ற பெயரில் blogக்கிக் கொண்டிருக்கும் சந்திரன் அல்ல. எனது முயற்சியில் 'pournami.blogspot.com' என்ற பெயரில், எதோ ஒரு நண்பர் 'சந்திரன்' என்ற பெயரில் எழுதி வருகிறார் என அறிகிறேன். காசி... போன்ற வித்வான்கள் யாராவதுதான் இவ்விஷயத்தில் எனக்கு உதவ முடியும் எனத் தோன்றுகிறது. கட்டாயம் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த மனுஷரை கண்டுபிடியுங்கள். எனது முயற்சியில் அவரது பக்கத்துக்கு தொடர்பு செல்ல மறுக்கிறது. அவரது blogger profile எண் 8156108. அந்தப் பக்கத்தை சரியாக அணுக முடியவில்லை. நான் 'நாலாவது கண்' என்ற பெயரில் எழுதுபவன். எனது blogger profile எண் 7107854.

அந்த சந்திரன் கருத்தைப் பார்த்துவிட்டு நண்பர் சுந்தரமூர்த்தி அது எனது (நாலாவது கண் சந்திரன்) என்று எண்ணி பின்னூட்டம் ஒன்றையும் அதே பதிவில் விட்டிருக்கிறார். மற்ற பலரும்கூட அப்படி நினைத்திருக்கலாம். யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள். Reservation குறித்து எனது கருத்தே வேறு. இப்போதல்ல; 10 ஆண்டுகளுக்கு முன்பே Reservation policy குறித்து எனது கருத்துகளை ஒரு கட்டுரையாக எழுதினேன். கொஞ்சம் அமெச்சூர் தனமான கட்டுரையாக இருக்கிறது (கருத்தல்ல!) என்று அப்போதே டிரங்க் பெட்டி (நன்றி 'அல்வா' விஜய்)யில் போட்டு விட்டேன். இப்போது அதை தேடி எடுத்து... திருத்தி இங்கே போட வேண்டும் போல!

அடுத்து 'சந்திரன்' என்ற பெயரில் இங்கே கருத்திட்டு இருப்பது யார் என்றும் தெரிந்து கொள்ள யாராவது உதவ முடியுமா? அவர் கருத்து சொல்வது blogகுவது எல்லாமே அவரது உரிமை. ஆனால் அதைக் கண்டு எனது கருத்தோ என்று நண்பர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

புதன், ஏப்ரல் 06, 2005

'டிஸ்கோ சாந்தி'க்குத் தடை

நிஜந்தாங்க! 'டிஸ்கோ சாந்தி'... 'சிலுக்கு ஸ்மிதா'.... 'ஜெயமாலினி'.... இப்படி போன தலைமுறை ஆட்களைச் சொன்னால் கோவித்துக் கொள்பவர்கள் 'பாபிலோனா'... மாதிரி இன்றைய ஆட்ட நாயகிகளை (பட்டியல் இப்போ ஞாபகம் வரலீங்க! மன்னிக்கனும்!) நினைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் தடை விதித்திருக்கிறார்கள். இங்கல்ல; மகாராஷ்ட்ராவில்!

''இவங்கல்லாம் சென்னையை விட்டுட்டு எப்ப அங்க போனாங்க?'' என்று அப்பாவித்தனமா கேக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நம்ம Blog சமுதாயம்தான் இதிலெல்லாம் சமுத்தாச்சே; இந்த மாதிரி செய்தியெல்லாம் தெரியாமலா இருக்கும். தேசிகன் எழுதிய 'நானும் ஒரு டஜன் பெண்களும்' என்ற தலைப்புக்கு வந்த Feedback மற்றும் கிளிக் ரேட்டிலேயே தெரிந்ததே எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று! என்னையும் சேர்த்திதான். சரி விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரத்தில் மகாராஷ்ட்ர துணை முதல்வர் ஆர் ஆர் பட்டேல், அந்த மாநில இளைஞர்கள் ரொம்ப கெட்டழிந்த போவதாகச் சொல்லி, அந்த மாநிலத்தில் இருந்த 'டான்ஸ் பார்'களுக்கு தரப்பட்ட லைஸன்சை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதையொட்டி எல்லா டான்ஸ் பார்களும் இழுத்து முடப்பட்டன. (மும்பை நகரத்தில் மட்டும் விதிவிலக்கு (!) என தகவல் - தற்போதைக்கு). பிபிசி வலைதள தகவல்படி அந்த மாநிலத்தில் 1500 பார்கள் அனுமதியுடன் செயல்பட்டனவாம். அதில் கிட்டத்தட்ட 1 லட்சம் பெண்கள் வேலை செய்து வந்தார்களாம். எல்லாருக்கும் டான்ஸ் ஆடும் வேலைதான். 'நான் சிரிச்சா தீபாவளி....' நினைவிருக்கிறதா?

அரசின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் தொழிலை இழந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த பெண்கள் இப்போது போராட்டத்தில் உள்ளனர். இந்த பெண்களுக்கு என்று தனியாக தொழிற் சங்கம் கூட இருக்கிறதாம். பாரதிய பார் கேர்ள்ஸ் யூனியன். மொத்தம் 60 ஆயிரம் பெண்களுக்கு மேல் இப்போதைய அரசு தடையால் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்கிறது இந்த யூனியன் தகவல். கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் இவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தால் கொஞ்சம் ஆடிப்போன ஆர் ஆர் பட்டேல், ''இந்த பெண்களில் பெரும்பாலோர்... கிட்டத்தட்ட 70 சதவிகிதம்வரை பங்களா தேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன'' என்று, இந்திராகாந்தி காலத்து 'காங்கிரஸ் பாணி'யில் அறிக்கை விட்டிருக்கிறார்.

இது இந்த பெண்களை இன்னும் அதிக ஆவேசம் பெற வைத்துள்ளளது. யூனியன் தலைவி வார்ஷா காலே, ''இந்தியர் அல்லாதவர்களும் எங்களுடன் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், தனது நடவடிக்கையை நியாயப்படுத்த இதுகுறித்து விபரங்களை அரசு அநியாயத்துக்கு கூட்டிச் சொல்கிறது. மொத்தத்தில் 4 சதவிகித பெண்கள்கூட மற்ற நாட்டவர் இல்லை. அதைவிட முக்கியம் இந்த தொழிலில் இருப்பவர்கள் யாரும் ரேஷன் கார்டு உள்ளிட்ட எந்த விதமான அடையாள அட்டைகளும் கொண்டில்லாதபோது அவர்கள் எல்லாரையும் எந்த அடிப்படையில் மாநில அரசு இப்படி முத்திரை குத்தி ஒதுக்கிறது?'' என்று கேட்கிறார்.

என்டிடிவியில் கேள்விக்கு பதில் சொன்ன இவர், ''இந்த பெண்களில் பெரும்பாலோருக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. பலரது குடும்பம் இவர்கள் மூலமாக வரும் வருமானத்தை நம்பி இருக்கிறது. இதனால் பல குடும்பங்களும் பட்டினி சாவுக்குத் தள்ளப்படுகிறது. எங்களுக்கெல்லாம் சரியான நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். அல்லது தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்'' என்கிறார்.

'இளைஞர்கள் இது போன்ற பார்களால் சீரழிந்து போகிறார்கள் என்பது உண்மைதானே! இதில் இளம் பெண்களையும் பழக்குவதால் இந்திய கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதானே!' என்றால், ''இந்திய இளைஞர்கள் இதனால்தான் கெட்டுப் போகிறார்கள் என்றால் மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி? அத்துடன் இந்த மாதிரி பார்களுக்கு எல்லாதரப்பு இளைஞர்களும் வருவதில்லை. பணத்தால் கொழுத்த... சமூக விரோத காரியங்களில் பழகிய... என கொஞ்சம் திசை மாறிய, அதிலும் பெரும்பாலும் நடுத்தர வயது... அதைத் தாண்டியவர்கள்தான் வருகிறார்கள்'' என்கிறார்கள் போராடுபவர்கள். மேலும், ''பெண்களைப் பொறுத்தவரை - இந்திய கலாச்சாரத்தில் இது புதிதான தொழில் அல்ல. இந்தத் தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ள பெரும்பாலோருக்கு பாரம்பரியமான தொழிலே இதுதான். அதனால்தான் அவர்களால் இதற்கு மேல் வேறு வேலைகளை கற்றுக் கொண்டு அதற்குச் செல்ல முடியாது என்று சொல்கிறோம்'' என்கிறார் தொழிற் சங்க தலைவி.

இந்த தடை குறித்து மும்பையில் இருந்த வௌதவரும் 'மகாநகர்' பத்திரிகை ஆசிரியர், ''ஆர் ஆர் பட்டேல் அவசரப்பட்டுவிட்டார். இதைத் தடுப்பதால் சமூகத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்று உணராமலேயே செய்துவிட்டார். இந்தத் தடையால் - இந்தத் தொழிலில் இருந்தவர்கள்.... இந்த பாருக்கு வந்தவர்கள் என இருதரப்பும் - தஞ்சம் அடைய இடம் இல்லாமல் வேறு வழிகளில்... தடங்களில்... திசைகளில்... இறங்கி வேறு மாதிரியான புதியப் பிரச்னைகளை உருவாக்கிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்'' என்கிறார். உண்மைதான் எனத் தோன்றுகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படக்கூடியதல்ல. அதைத்தாண்டி மனோரீதியான அணுகுமுறையும் தேவைப்படும் இந்த விஷயத்தில் மும்பை நகரம் மாதிரியான - பேட்டை தாதாக்கள் அல்ல; கோட்டை தாதாக்கள் உள்ள இடங்களில், அவசரம் காட்ட வேண்டிய விஷயம் இது அல்ல எனத் தோன்றுகிறது. திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து இதை வழிக்கு கொண்டுவரலாம் என்று போலிஸார் சொல்கிறார்கள். இதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறீர்கள்?

திங்கள், ஏப்ரல் 04, 2005

வாய்ப்பு (சிறுகதை)

அனுராக் எடுத்த, மாலன் அவர்களது பேட்டியின் இரண்டாம் பகுதியில் - மாலன் அவர்களுக்குப் பிடித்தது, 'பத்திரிகை உலகப் பின்னணியில் அவர் எழுதிய கதை' என்பதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான், இந்த எனது 'பத்திரிகையுலகப் பின்னணி கதை'யை (7 வருடங்களுக்கு மேலாகிறது, இந்த கதையை நான் எழுதி) வலைபதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. நான் சிறுகதைகள், நாவல் என அதிகம் எழுதியதில்லை. 'தவிர்க்க முடியாது' என்று உணரும்போது மட்டுமே, அதை வடித்து வைக்க படைப்பிலக்கியத்தைத் தொட்டிருக்கிறேன். அவைகளில் ஒன்று இது. கதை சற்று நீளம்தான். அதற்காக, இரண்டு, மூன்று பகுதிகளாகக் கொடுப்பது அராஜகம் என்று தோன்றியதாலேயே முழுவதுமாக கொடுத்துவிட்டேன். இனி, இதை விமர்சிப்பது உங்கள் பாடு!

வாய்ப்பு

''என்ன மகேஷ்... என்ன... தீடீர்னு பீச்சுக்கு வரச் சொல்லியிருக்கீங்க....? இங்க வந்து உங்கள எங்க தேடனுமோன்னு நெனச்சேன்...''

''உன்னை வரச் சொல்லிட்டு, புதுசா எங்கயாவதா போய் உட்கார முடியும்? அதான் எப்பவும் உட்கார்ர அதே இடத்துலேயே உட்கார்ந்துட்டேன்''

''வந்து ரொம்ப நேரமாவுதா?''

''.................................''

பதில் இல்லை. மகேஷ் கடல் அலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதி. அலைகளின் சத்தம், அமைதியை விரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தது. அமாவாசையானதால் இன்று கடல் அலைகளின் வேகமும், துள்ளலும் சற்று கூடுதல்.

''என்ன மகேஷ்.... இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்கீங்க... வழக்கமான உங்க வேகத்த காணோம்! என்ன பிரச்னை? எங்கிட்ட சொல்ற விஷயமா?, இல்லைன்னா வரச் சொல்ல மாட்டீங்களே?'' என்று அமைதியை உடைத்தாள் சுதா.

மகேஷ் தொடர்ந்து கடலையே வெறித்துக் கொண்டிருந்தான்.

''அக்கா... சூடா சுண்டல் இருக்கு... வறுத்த வேர்கடலை, முறுக்கு.....'' என்றபடி வந்தான் கடற்கரை 'சுண்டல்' பையன்.

''இப்ப எனக்கு சூடா டீ வேணும்... இருக்கா?'' என்றபடி மகேஷ் பக்கம் திரும்பி, ''உங்களுக்கு ஏதும் வேணுமா?'' என்றாள் சுதா.

''இல்லை தம்பி..., எதுவும் வேணாம். நாங்க கிளம்பறோம்'' என்றபடி எழுந்தான் மகேஷ்.

''என்ன.... நான் வந்தவுடனே எழுந்துட்டீங்க?... அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க'' - சுதா.

''ஒண்ணுமில்ல..... இன்னிக்கி 'தினமுரசு' ஆபீஸ் போனபோது, பக்கத்துல ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு? அது ஞாபகம் வந்தது. அதான் யோசிச்சேன்''.

''அப்படி என்ன சொன்னார்.''

''ம்... ரொம்பவே கேஷியுலா, 'பத்திரிகை ஃபில்டுல திறமைல்லாம் ஒரு பக்கம்; வாய்ப்பு கிடைக்கணும்! கிடைச்சா பெரிய ஆள் ஆயிடலாம். கிடைக்காதவரை, யாராயிருந்தாலும் போராட்டம்தான்''ன்னு சொன்னார். அதைத்தான் அசை போட்டுட்டு இருந்தேன்''

''...............................''

''சரி.... நீ என்ன யோசிக்கறே.... கிளம்பு.... போவோம்....''

''என்ன விஷயமா என்னை வரச்சொன்னீங்க? எதுவும் சொல்லாம கிளம்பறீங்க....?''

''எப்ப... வரச் சொன்னேன். நீ எப்ப வர்றே.... இப்ப டைம் ஆயிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். இங்க நாம ரெண்டு பேருதான். இதுக்கு மேல இங்க வேணாம். சூடா டீ கேட்டியே..., அப்படியே போய் டீ சாப்பிட்டு கிளம்பலாம்'' என்று திரும்ப, பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த மீனவ சிறுவர்கள் இடித்துக் கொண்டு ஓடினர். அவர்கள் ஓடியதும் ஆடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடி நடந்தான் மகேஷ். சுதாவும் உடன் நடந்தாள்.

''ம்... இன்னையோட ஆறுமாசம் முடிய போவுதா?... என்னயிருந்தாலும் நீங்க அவசரப்பட்டிருக்க கூடாது! இன்னிக்கு ஒவ்வொரு பத்திரிகை ஆபிஸா நாய் மாதிரி அலைய வேண்டியிருக்கு... சரி... பத்திரிகைலதான் சான்ஸ் கிடைக்கலன்னு, அத விட்டுட்டு படிச்சதுக்கு ஏத்தபடி டிரைபண்ணா இன்ஜினியரா வேலைக்கு சேந்துக்கலாம். அதையும் பண்ணாம, எவ்வளவு நாளைக்கி இப்படியே காலத்த ஓட்டப் போறீங்க! எனக்கென்னவோ நீங்க பண்றது நல்லதா தெரியல.''

''சரி... அதை விடுமா...''

''பின்னென்ன! ஆரம்பத்துல எழுதணும்; நம்ம பேரு பத்திரிகைல வரணும்னு தவிச்சீங்க! 'சரி'ன்னு எங்க ஆபிஸிலயே இண்ட்ரடியூஸ் பண்ணேன். கொஞ்ச கொஞ்சமா எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ரெகுலரா வேலைக்கு சேர்ந்தீங்க.... பத்திரிகை ஒரு பப்ளிக் மீடியம். அதுக்கு சில பொறுப்பு உண்டுதான். ஆனா பத்திரிகை நடத்தறவங்களுக்கு அது ஒரு பிஸினஸும்கூட. அதோட, நீங்க வேலை செஞ்சது ஒண்ணும் பெரிய நிறுவனத்திலிருந்து வந்த எஸ்டாபிலிஸ்டு பத்திரிகை இல்ல... அதனால நீங்க கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கத்தான் வேணும்''.

''இங்க பாரு சுதா! நீயும் மத்தவங்க மாதிரியே பேசாதே! நீ சொல்றதெல்லாம் எனக்கும் தெரியாம இல்ல! ஆனா இங்க என்னோட பிரச்னை, அது இல்லே! இது முழுசா ரெண்டு பேருக்கிடையேயான ஈகோ பிரச்னை. அதுவும் நான் சேர்ந்த புதுசுல, என்னை அறியாம நடந்த ஒரு பொறி! அப்ப ஆரம்பிச்ச மிஸ் அண்டர்ஸ்டேண்டிங், இப்படி வந்து முடிஞ்சது. இதுதான் உண்மை. அஞ்சு வருஷமா என்கூட பழகறே! ரெண்டு வருஷமா என் கூட வேலை செஞ்சே! உனக்கே இது புரியலைன்னா நான் என்னத்த சொல்றது... சரி.... இப்ப அந்த பேச்சைவிடு. உன் மேரேஜ் விஷயம் என்னாச்சு....''

''அத பேசவா என்ன வரச் சொன்னீங்க.... பேச வந்த விஷயத்தையே விட்டுட்டீங்களே! ம்.... அப்புறம்... உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு.... ஆனா இன்னிக்கி உங்கள பாக்க முடியும்ணு தெரியாதில்லே. அதனால எடுத்துட்டு வரலை. ஹாஸ்டல்ல இருக்கு...''

''அப்படியா? எங்கிருந்து வந்திருக்கு..... பாத்தியா?''

''திருச்சியிலிருந்து.... உங்க ஃப்ரெண்ட் யாராவதிருக்கும்'' பேசியபடியே மணலைவிட்டு, லைட் அவுஸ் அருகில் இருந்த நெடுஞ்சாலை கடைக்கு வந்தனர்.

''ஏம்பா.... ரெண்டு டீ, ஸ்ட்ராங்கா?'' என்றான் மகேஷ், டீ கடையைப் பார்த்து.

''சரி... வேற அட்ரஸ் தேடற விஷயம் என்னாச்சு!''

''சுதா..... கொஞ்சம் பொறுத்துக்க... ஆறு மாசமா அடிக்கடி இடம் மாறிட்டேயிருக்கேன். ஒரே இடத்துல தங்க முடியலன்றதாலதான் உன் அட்ரஸை கேர்-ஆப் அட்ரஸா யூஸ் பண்ண வேண்டியிருக்கு. சீக்கிரத்துல வேற ஏற்பாடு பண்ணிடறேன். அது வரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்க... ப்ளீஸ்....''

''எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல. உங்களுக்குதான் உடனே தகவல் கிடைக்காது. அதுக்குதான்''

டீ கடைப் பையன் டீ கொண்டு வர, ஒரு கிளாஸை வாங்கிக் கொண்டு, 'அங்க ஒரு டீய கொடு' என்று சுதாவைக் காட்டினான் மகேஷ்.

டீ கிளாஸை வாங்கியபடி, ''சரி.... சொல்லுங்க... என்ன விஷயம்?'' என்றாள் சுதா.

''விஷயமென்ன! நீ சொன்ன மாதிரி மறுபடியும் என்ஜினியராயிடலாம்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். அது பத்தி பேசத்தான் வரச் சொன்னேன். இப்ப வௌதயிலிருந்துகிட்டு நிறைய பத்திரிகைக்கு எழுத முடியுது. ஆனா நாம கொடுக்கறத அவங்க வௌதயிடறாங்களான்றது உறுதியில்லாமயிருக்கு! சில நேரங்கள்ல..., கொஞ்சம் லேட்டானாலும் அதுக்குள் வேற பத்திரிகைல, அதே மேட்டரு வந்துடுது. சில நேரத்துல பர்மிஷன் வாங்கிட்டு செய்ய வேண்டிய மேட்டருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலை ஒத்துவரலேன்னா அந்த மேட்டர் அதோகதி! இது மாதிரி மிஸ்ஸான விஷயங்களே நிறைய. இதே மாதிரி போனா, ஒத்து வராதுன்னு தோணுது. அதனால வேற ஏதாவது பண்ணித்தான் ஆகணும். அதுதான் யோசிக்கறேன்.''

''ஹா.... ஹ்ஹா..... ஹா'' சுதா வாய்விட்டு சிரித்தாள்.

''என்ன சுதா சிரிக்கிற! சொல்லிட்டு சிரியேன்''

''....சிரிக்கறேன்னு தப்பா நெனக்காதீங்க.... யாரோ சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது, அதான் சிரிச்சேன்... ஸாரி....''
''என்ன விஷயம்?''

''ம்... பாரதிராஜா படம் பண்ணணும்னு மெட்ராஸ் வந்து அலைஞ்சிட்டு வாய்ப்பு கிடைக்காம ஊருக்கு திரும்ப போறதுன்னு முடிவு பண்ணராம். அப்ப அவர் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு போவ நெனச்சிருக்காரு. ஃப்ரெண்ட் அந்த நேரத்துல ஒரு ப்ரிவியூ தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்க, அங்க போயிருக்காரு பாரதிராஜா. வாட்ச்மேன் இவரைப் பாத்துட்டு 'உள்ளே விடமாட்டேன்''னு மறுத்துட்டாராம். பாரதிராஜா எவ்ளோ சொல்லியும் கேக்காம அவரை கைய பிடிச்சி இழுத்துட்டு வந்து வௌதயே விட்டுட்டுட்டாராம். அதை பெரிய இன்சல்டா நெனச்சி, 'இதே ப்ரிவியூ தியேட்டர்ல நம்ம படம் போடணும். அதுக்கு நாம வரும்போது இதே வாட்ச்மேன் நம்ம வரவேற்கணும்'னு முடிவோட திரும்பப் போராடித்தான் ஜெயிச்சாராம்.... இது உண்மையா... கற்பனையான்னு எனக்குத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டது''

''சரி... இதுல சிரிக்க என்னயிருக்கு? அதோட, இதே நிலைமை எனக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல! பார்ப்போம்.''

டீ கடை பையன் மீண்டும் வந்து, டீ கிளாஸை வாங்கிக் கொள்ள, மகேஷ் சில்லறை கொடுத்தான்.

''சரி..... இருட்டிடுத்து.... நான் கிளம்பறேன்.... நாளைக்கி ஞாயித்துக்கிழமைதானே.... சாய்ந்திரம் வாங்களேன். எங்க அண்ணன் வந்தாலும் வருவாரு.... வந்தா, அவரையும் கூட்டிகிட்டு வரேன். அப்ப பேசுவோம்'' என்றாள் சுதா.

''சரி கிளம்பு... உனக்கு ஹாஸ்டலுக்கு போக லேட்டாயிட போவுது. நாளைக்கு வரும்போது ஞாபகமா அந்த லெட்டரை கொண்டு வா?''

சுதா மொப்பட்டை கிளப்பிக் கொண்டு ஹாஸ்டலுக்குப் பறந்தாள்.

***

ஞாயிற்றுக்கிழமை மாலை.

நெருக்கடி நிறைந்த கிண்டி பஸ் ஸ்டாப். விடுமுறையானதால் கூட்டம் குறைந்திருந்தது. கைக்கடிகாரத்தைத் திரும்பி பார்த்தான் மகேஷ். மணி 3.30. அண்ணா சதுக்கம் செல்லும் 45Bக்காக காத்திருந்தான். தற்செயலாக திரும்ப பக்கத்தில் நின்ற தம்பதியரை எங்கோ பார்த்தது போல் தோன்றியது. யோசித்தபடி மகேஷ் நிற்பதை கவனித்து விட்ட அந்த பெண்மணி -
''ஏங்க.... இங்க பாருங்க.... 'தமிழ் மணி' மகேஷ்!'' என்றாள் தன் கணவனிடம்.

திரும்பிப் பார்த்த அவர், ''ஹலோ.... எப்படியிருக்கீங்க.... அப்புறம் இந்த பக்கமே காணோம்... நீங்க எழுதின அந்த ரிப்போட்டுக்கு நல்ல எஃபெக்ட் சார்... அடுத்த மூணு மாசத்துல எல்லா வேலையும் முடிஞ்சுது. இப்ப எங்க ஏரியா மக்கள் ரொம்ப சந்தோஷமாயிருக்காங்க.... ரொம்ப தேங்கஸ் சார்....'' என்றார்.

''பரவாயில்ல.... நீங்க எப்படியிருக்கீங்க....'' என்றான் மகேஷ்.

''நல்லாயிருக்கோம்.... காலேஜ் அட்மிஷன் பத்தி நீங்க எழுதின ஒரு கட்டுரைக்கு கூட நல்ல இம்பேக்ட் இருந்துதாம். என் பொண்ணு சொல்லுவா.... அவங்க காலேஜ்ல உங்க பத்திரிகைக்கு தனியா ஒரு 'ரசிகர் மன்றமே' இருக்காமே...''

''அப்படியா?''

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே 45B வந்து நிற்க, ''நான் அவசரமா பீச்சுக்கு போறேன். பஸ் வந்துடுச்சு... அப்புறம் பேசலாம்... வரட்டுங்களா?'' என்றான் மகேஷ்.

''சரி.... அப்புறம் வீட்டுப் பக்கமா வாங்க....'' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே மகேஷ் பஸ்ஸில் ஏறினான்.
பஸ்ஸிலும் கூட்டம் இல்லை. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்ததும் மகேஷ் சன்னல் பக்கம் திரும்பினான்.
பஸ் செல்லம்மாள் கல்லூரியைக் கடந்து கொண்டிருந்தது. மகேஷின் கண்களில்பட்டது பிரபல வாரப்பத்திரிகையின் புதிய தொடர் குறித்த விளம்பரம். கல்லூரி நாட்களிலேயே, பத்திரிகைகள் மகேஷைக் கவர்ந்த விஷயம். பாடப் புத்தங்களுடன் செலவிட்ட நேரத்தைவிட பத்திரிகை, புத்தகங்கள், எழுத்தாளர்கள் என இவன் செலவிட்ட நேரம்தான் அதிகம்.
அறிவியல், தொழில் நுட்பம் என அப்போது தமிழில் ஏராளமாக படைப்புகள் - கதைகளாகவும், கட்டுரைகளாகவும் வௌதவந்து கொண்டிருந்தன. எலக்ட்ரானிக் தொழில் நுட்பங்கள், நாவல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து எல்லாரையும் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தன. சம்மந்தமில்லாமல் 'மின்னணு அறிவியல்' படைப்பிலக்கியத்தில் மாற்றங்களை உண்டாக்கி......
மகேஷ் கற்பனை எங்கோ பறந்து கொண்டிருந்தது.

......... மின்னணுத் துறை இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உண்டாக்க முடியுமானால் இன்னொரு தொழில் நுட்பமான 'சிவில் என்ஜினியரிங்' நுட்பங்களைப் பயன்படுத்தி விறுவிறுப்பும், வேகமும் கொண்ட கதைகளை நாமும் ஏன் எழுத முடியாது? நாம் படித்த சிவில் என்ஜினியரிங் துறை நுட்பங்கள் பலவற்றை பிரமிப்பூட்டும் நாவலாக மாற்ற முடியுமே! இந்தத் துறையில் புதைந்து கிடக்கும் இப்படிப்பட்ட இன்னும் பல விஷயங்களை, சிக்கல்களை பயன்படுத்தி எத்தனை நாவல்களை எழுத முடியும் என்ற சிந்தனையிலேயே நேரத்தை ஓட்டிய கல்லூரி நாட்கள் மகேஷின் மனக்கண்முன் ஓடின. ஒருவேளை மீண்டும் என்ஜினியராகத்தான் மாறியாக வேண்டும் என்றால் அப்போது 'நாவல்'களை மட்டுமாவது விட்டுவிடக் கூடாது! ஒருவழி செய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாக செய்தி, விமர்சனம்.... இத்யாதி இப்படியே கவனம் செலுத்தியதால் 'கதை', 'கவிதை' போன்ற படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் பத்திரிகையில் கதை எழுதுவது, நாவல் எழுதுவது எல்லாம் மட்டும் சுலபமா? நாம் சந்தித்த எத்தனையோ தொடக்க நிலை எழுத்தாளர்களின் அனுபவம் என்ன? கதை தேர்வில் பிரபல பத்திரிகைகளிலும் கூட 'நட்பும், உறவும்'தான் அதிக அளவில் உதவ முடியுமாமே! ஏதேனும் சந்தர்ப்பம்... ஏதேனும் ஒரு வாய்ப்பு... சரிதான், மறுபடியும் வாய்ப்புதான்....! பத்திரிகைத் துறையே வாய்ப்பில்தானா? மற்றதெல்லாம்...?

''சார்... கொஞ்சம் தள்ளி உட்கார்றீங்களா....?'' சக பயணி, மகேஷின் முதுகைத் தொட - மகேஷ் சிந்தனை கலைந்து நினைவுக்கு வந்தான். நகர்ந்து பயணிக்கு இடம் தந்து விட்டு மீண்டும் சன்னல் பக்கம் திரும்பினான்.

"குயின் மேரிஸ்ஸெல்லாம் எறங்கு..."

கண்டக்டர் முன்புறமிருந்து கத்த, மகேஷ் வேகமாக எழுந்தான். ஞாயிற்றுக்கிழமை பீச் கூட்டம், பஸ்ஸில் நிரம்பி வழிந்தது. வண்டி மெல்ல நகரத் தொடங்க, மகேஷ் படியில் இருந்தவரைத் தள்ளிக்கொண்டு கீழே குதித்தான்.
.
.
.
.
.
.
.
"ஹாய் மகேஷ்... வாடா... ஏன் லேட்.... பஸ்ல கூட்டமா? - சுதாவின் அண்ணன் பிரகாஷ்.

"ஆமாண்டா! நீ எப்ப வந்தே?"

"நான் காலைல வந்தேன். ஆனா பீச்சுக்கு நாலு மணிக்கே வந்துட்டோம். உட்கார்."

"அப்புறம் என்னடா சுதா மேரேஜ், எந்த ஸ்டேஜ்ல இருக்கு?" என்றபடி அமர்ந்தான் மகேஷ்.

"நான் மெட்ராஸ் வந்ததே அதுக்குதான்! ஆனா அதுக்கு முன்ன... நீ மறுபடியும் என்ஜினியரா ஆயிடலாம்னு யோசிக்கறதா சுதா சொன்னா! என்ன விஷயம்? அப்ளிகேஷன் ஏதுவும் போட்டிருக்கியா?"

"இல்லடா, அப்படி ஒரு யோசனை இருந்தது... ஆனா...."

"என்னடா ஆனா... இப்படியேதான் சொல்லிட்டு இருக்கே! சரி. பத்திரிகை... பத்திரிகைன்னு கட்டிட்டு அழறதைவிட டி.வி. மீடியா எதுக்காவது டிரை பண்ணலாமில்லயா?"

"ஆமாம்! டி.வியும் ஒரு மீடியாதானே; நீங்க சொல்ல நெனக்கறதை அதுல சொல்லலாமில்லையா" என்றாள் சுதா.

"நம்ம சாடிலைட் மீடியா ஃபுல்லா, இப்ப வேற திசையில போயிட்டு இருக்கே! நல்லவேளை இப்பவாவது முன்னயிருந்த பரிசு..... போட்டின்னு இருந்த டிரண்ட் மாறியிருக்கு. அதுக்கான போஸ்ட் கார்டுக்கு விலை கூட்டினது எவ்வளவோ பரவாயில்லை. இல்லைன்னா இது மூலமா கவர்மெண்டுக்கும் எவ்வளவு நஷ்டம் !" - மகேஷ்.

"ம்... போட்டின்னதும் ஞாபகம் வருது. 'பாலிடிக்ஸ் & ப்பிபூள்ஸ்'ல்ல ஒரு போட்டி வைச்சிருக்கான். 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், அதன் சவால்களும்'ன்ற தலைப்புல ஒரு ஆய்வு கட்டுரை எழுத சொல்லியிருக்காங்க! இங்கிலிஷ்ல. முதல் பரிசு ரூ.10,000/-. ஆறுதல் பரிசு ரூ.1000/-. அதுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன், மகேஷ். கட்டுரைய அனுப்ப இன்னும் பத்து நாள் இருக்கு. இந்தாங்க அந்த கட்டிங்." என விளம்பரத்தை நீட்டினாள் சுதா.

"ம்... பார்ப்போம்" எனக் கூறி, அதை வாங்கிக் கொண்ட மகேஷ், "சரி.... இதெல்லாம் இருக்கட்டும்!. உன் மேரேஜ் விஷயம் என்னாச்சு, அதுபத்தி சொல்லும்மா" என்றான்.

சுதா, அண்ணன் பிரகாஷைப் பார்த்து புன்னகைத்தபடி தலையை கவிழ்த்தாள்.

"ஆமாண்டா. நான் வரும்போது பையன் போட்டோ கூட கொண்டாந்தேன். என்னம்மா, போட்டோ ஹாஸ்டல்ல இருக்கா?" என்று சுதாவைத் திரும்பிப் பார்த்தான் பிரகாஷ்.

"ஆமாம்" - சுதா

"என்ன உனக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கா... மாப்பிள்ளை என்ன பண்றார்?"

"அவரும் ஜர்னலிஸ்ட்தான்" என்று சிரித்தாள் சுதா.
"அடுத்த வாரம் பெண் பார்க்க வீட்டுக்கு வர்றாங்க... இவளுக்கு தகவல் சொல்லத்தான் வந்தேன்" என்றான் பிரகாஷ்.

"சரி அதை விடுங்க!. உங்க விஷயத்த பேசுங்க" என்றாள் சுதா.

"என்ன.., வேலை விஷயம்தானே! நேத்து உன்னை அனுப்பிட்டு ரூம் போய் யோசிச்சேன். வாழ்க்கைல போராடாத எவனுக்கும் வெற்றி ஈஸியா கெடைக்கறதில்லை. முன்னேறின எல்லாருமே போராடி போராடித்தான் ஜெயிச்சிருக்கான். நாமும் இன்னும் கொஞ்ச நாள் போராடுவோம். அப்புறம் வேணா பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" - மகேஷ்.

"என்னவோடா, பாத்துக்கோ! நானும் ஊருக்கு கிளம்பணும். டைம் ஆயிட்டு இருக்கு." என்றபடி பிரகாஷ் எழ, சுதாவும் மகேஷும் கிளம்பினர்.

***

வௌளிக்கிழமை. மாலை 4 மணி. கரிகாலன் தெருவில் 'சரஸ்வதி நியூஸ் மார்ட்'டில் டெலிபோன் அலறியது.

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

கடை பையன் வாடிக்கையாளர்களுக்கு மாலை பத்திரிகை வினியோகத்தில் சுறுசுறுப்பாக இருக்க, கடையின் ரெகுலர் விசிட்டர் என்ற உரிமையோடு மகேஷ் ரிஸீவரை எடுத்தான்.

"ஹலோ... நாங்க 'தமிழ் மணி' பத்திரிகைலயிருந்து பேசறோம். எதிர் வீட்ல மகேஷ்ன்னு... அவரைக் கூப்பிட முடியுமா?"

"யாரு... சுதாவா? நான் மகேஷ்தான் பேசறேன். சொல்லுமா?"

"எப்படி... நீங்க கரெக்டா போன் எடுக்கறீங்க, கடைக்கு காவலா? எனிவே, 'பாலிடிக்ஸ் & ப்பியூள்ஸ்'க்கு நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். உண்மைலேயே ரொம்ப நல்ல அனாலிஸிஸ். நான் படிச்சிட்டு இருக்கும்போது நம்ம ஆபிஸ் 'மனோகர்' சார்கூட பாத்துட்டு கேட்டாரு, நீயா எழுதினன்னு! 'நாளைக்கு எடிஷன்ல போட்டுடுவோம்'ன்னு கைல எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அப்புறம் 'போட்டி'க்குன்னு சொன்னேன். ஆனா நீங்க எழுதினதுன்னு சொல்லல. உங்களுக்கும் அவருக்கும் தானே இங்க பிரச்னை, அதனாலதான். 'ரொம்ப நல்லாயிருக்கு. அனுப்புமா! கட்டாயம் பிரைஸ் கிடைக்கும்'னு சொன்னாரு. அதை உங்களுக்கு சொல்லத்தான் போன் பண்ணேன்."

"சரி... இப்ப ஆபிஸில வேற யாரும் இல்லயா?"

"இல்லை. சரி, கட்டுரையை அனுப்பிட்டீங்களா? அடுத்த முறை பாக்கறப்ப இந்த காப்பிய வாங்கிடுங்க! அதுக்குள்ள அண்ணன் வந்தா அவருக்கும் காட்றேன்.''

"சரி சுதா... இப்ப இன்னொரு யோசனை!"

"என்ன சொல்லுங்க?"

"சரியா ஒரு இடத்துல தங்க முடியலன்னு இதுவரைக்கும் உன் அட்ரஸை, கேர்-ஆப்ன்னு.. யூஸ் பண்ணிட்டேன். ஆனா உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ற நேரத்துல இது நல்லதில்லைன்னு தோணுது! இதனால ஏதும் பிரச்னை கூடாதுன்னு நெனக்கிறேன்"

"அதை விடுங்க. பிரச்னையெல்லாம் ஆகாது. எங்க வீட்ல, அண்ணனுக்கு, என் ஃபிரெண்ட்ஸ், எங்க ஹாஸ்டல் மேடம் எல்லாருக்குமே உங்களைத் தெரியுமே! இதுவரைக்கும் ஒருத்தர் கூட உங்களைப் பத்தி தப்பா பேசினதில்ல. நீங்க ஏன் வீணா போட்டு குழப்பிக்கிறீங்க."

"இல்லம்மா! உடனே நான் வேற அட்ரஸ் புடிக்கறதும் கஷ்டம். அதுக்காக உனக்கு தொடர்ந்து பிரச்னையா இருக்கவும் பிடிக்கல... அதனாலே ஒரு சின்ன ஹெல்ப்..."

"என்ன சொல்லுங்க."

"வேற ஒண்ணும் இல்ல. இவ்வளவு நாளா உன் அட்ரெஸ கடன் கொடுத்த... இப்ப உன் பேர கடன் கொடுக்க முடியுமா?"
"என்ன சொல்றீங்க, புரியலயே!"

"இந்தக் கட்டுரைய உன் பேரிலேயே, உன் அட்ரஸ் போட்டு அனுப்பலாம்னு நெனக்கிறேன். பரிசு கிடைச்சா நீ எனக்கு குடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு. அதனால... என்ன முடியுமா?"

"என்ன மகேஷ் நீங்க..."

"ப்ளீஸ்...."

"ப்ளீஸெல்லாம் வேணாம். ம்... போட்டு அனுப்புங்க. ஹாஸ்டல் அட்ரஸ்ல அனுப்பப் போறீங்க, அவ்ளதானே! பரிசு கிடைச்சா எனக்கு கமிஷன் கிடைக்குமா?" என்றபடி சிரித்தாள் சுதா.

"கமிஷனா..., நீயுமா? சரி விடு... ரொம்ப தேங்க்ஸ். இங்க போன் பண்ண மத்தவங்க வெயிட் பண்றாங்க. அப்புறம் பேசலாம்" என்று போனை வைத்தான் மகேஷ்.

***

இரண்டு மாதங்களுக்கு பின் ஒருநாள் -

காலை 11 மணி. மகேஷ் வௌதயே செல்லத் தயாராகி, அறைக் கதவை பூட்டினான். அதற்குமுன் சுதாவிடம் பேச எண்ணி, 'சரஸ்வதி நியூஸ் மார்ட்'டில் 'தமிழ்மணி' எண்களைக் சுழற்றினான்.

"ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்..."

"ஹலோ... தமிழ்மணி எடிட்டோ ரியல்... யார் வேணுங்க!"

"சுதா இருந்தா குடுங்க."

சில நிமிடங்களுக்கு பிறகு சுதா பேச-

"ஹலோ சுதா, நான் மகேஷ் பேசறேம்மா! எப்படியிருக்க! என்ன, மேரேஜுக்கு என்னையிலிருந்து லீவு போடற! வுட்பிகிட்ட பேசினியா!"

"ஸாரி... மகேஷ்! நானே உங்ககிட்ட பேசணும்னு நெனச்சேன். நல்லவேளை நீங்களே போன் பண்ணிட்டீங்க! நடுவுல அண்ணனைப் பாத்தீங்களே, அவர் ஏதும் சொன்னாரா?" என்றாள் சுதா.

"ஏன்... ஏம்மா? பேச்சே டல்லாருக்கு"

"ஸாரி மகேஷ். அண்ணன்தான் சொன்னாரு..., அவரு கொஞ்சம் ரிசர்வ் டைப் போலன்னு..."

"ஓ... அதுவா? அண்ணன் லெட்டர்ல எழுதியிருந்தானே! பார்த்தேன். அதனாலென்ன? இதுக்கெல்லாம் போய்... எல்லாம் போகப் போக சரியாயிடும். ஆனா ஒரு விஷயம் எனக்கு நல்லதுன்னு தோணுது"

"என்னது..."

"நல்லவேளையா அந்தப் போட்டி கட்டுரை அனுப்பினபோது பழையபடி கேர்-ஆப்ன்னு போடாம போனோன். வாழ்க்கைல ஒருமுறை சின்ன கீறல் விழுந்துட்டாலும் அது உறுத்திக்கிட்டேயிருக்கும். அதனால முடிஞ்சவரை அது வராம பாத்துக்கணும். நான் வேற அட்ரஸ்ஸுக்கு ஏற்பாடு செஞ்சிக்கிறேன். நீ இதுக்கு வருத்தப்படாதே."

"அப்புறம்... இன்னொரு விஷயம். அவரு ஜெர்னலிஸ்ட்ன்னு சொன்னேனே, அது எந்த பத்திரிகைன்னு தெரியுமா?"

"இல்லம்மா! ஏதோ எனக்கும் கேக்கணும்னு தோணல. ஏன்...? எங்க ஒர்க் பண்றார்?"

"பாலிடிக்ஸ் & ப்பிபுள்ஸ்'ஸில அஸோஸியேட் எடிட்டர் அவர்தானாம். இன்னும் மூணு மாசத்துல மெட்ராஸ் எடிஷன் வருதாம். அதுக்கு இவர்தான் இப்போதைக்கு ரெசிடண்ட் எடிட்டரா வறாராம் . அதோட நீங்க அனுப்பின கட்டுரைய கூட பாத்திருக்கார். 'நல்லாயிருந்தது. இவ்வளவு விஷயம் தெரியுமா, உனக்கு'ன்னு என்னைப் பாராட்டினார். நான் விஷயத்த சொல்ல வந்தபோது அண்ணன் குறுக்கிட்டு பேச்சை மாத்திட்டு, அப்புறம் என்கிட்ட சொன்னாரு. 'அந்தக் கட்டுரை நீங்க எழுதனதுன்றதைச் சொல்ல வேணாம்'னும் சொல்லிட்டாரு!"

"அப்படியா? அதுகூட நல்லதுக்குன்னுதான் நினைக்கறேன். சரி அதை விடு. ரிசல்ட் எப்ப வருதாம்? பரிசு கிடைச்சா செலவுக்கு பணமாவது கிடைக்கும்னு பாக்கறேன்."

"பரிசுக்கான இறுதி முடிவை அவங்க எடிட்டர்தான் எடுப்பாராம். ஆனா இந்தக் கட்டுரைகளை வெச்சு வெவ்வேற பகுதியிலிருந்து ஆளை செலக்ட் பண்ணி, ட்ரெயினிங் கொடுக்க போறாங்களாம். 'நல்ல நிறுவனம்'ன்றதால நல்ல சம்பளம் இருக்கும்னு சொன்னார். மெட்ராஸிலிருந்து இந்தக் கட்டுரையும் செலக்ட் ஆகியிருக்குன்னு சொன்னார்''

"என்னது... அப்படியா?"

"ஸாரி மகேஷ். அதுக்காக போன வாரம் அவங்க ஆபீஸிலிருந்து லெட்டர் வந்தது. ட்ரெயினிங் அடுத்த வாரம் தொடங்குது. இன்னிக்கி 'தமிழ்மணி'ல ரிசைன் பண்ணிட்டு நாளைக்கு நான் பாம்பே போறேன், ட்ரெயினிங்க்ல ஜாயின் பண்ண! நான் பாம்பே போய் லெட்டர் போடறேன். வேற ஒண்ணும் விஷயமில்லையே! வெச்சிடவா...." என்றபடி அவள் போனை வைப்பது, மகேஷின் காதுகளில் இடியாய் இறங்கியது.

மகேஷ் மெல்ல உறைந்தான்.

"சார்... என்ன பண்றீங்க..., நீங்க பேசறீங்களா, இல்லன்னா அவங்களாவது பேசட்டுமே! ஒரு வாய்ப்பு குடுங்க" என்றான் கடைப் பையன். 'வாய்ப்பு' என்ற சொல் மீண்டும் மகேஷைத் தாக்க, போனை வைத்து பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான், அடுத்த வாய்ப்பைத் தேடி....

வெள்ளி, ஏப்ரல் 01, 2005

மோடியா...? மோடி மஸ்தானா!

மோடியா...? மோடி மஸ்தானா!

இப்படி கேட்கத்தான் தோன்றுகிறது.

என்ன மாய மந்திரம் செய்வாரோ! மனுஷன் இந்த முறையும் தப்பிவிட்டார். திட்டமிட்டு தப்பினாரா? அல்லது, நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அவருக்கு சாதகமாக அமைந்துவிடுகிறதா? அல்லது, நடக்கும் சம்பவங்களை தன் சாதுர்யத்தால்... புத்திசாலித் தனத்தால் தனக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்கிறாரா? எப்படியோ! சிக்கலான சூழலில் அவர் மாட்டும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் கட்சித் தலைமையே மோடியின் பின்னால் உறுதியாக நிற்கும்படி ஆகிவிடுகிறது என்பதுதான் ஆச்சரியம் தருகிறது. அதனால், இந்தமுறையும் குஜராத் மாநிலத்தின் பாஜக பெருவாரி தலைவர்கள் (பெருவாரி கட்சியினர் என சொல்ல முடியுமா, தெரியவில்லை) எதிர்த்தும் நரேந்திர மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து அசைக்க முடியவில்லை.

நான் அறிந்தவரையில், முதல் சம்பவம் 2002ல்! அதற்கு முந்தைய ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த பல இடைத்தேர்தல்களில்... மாநகராட்சித் தேர்தலில்... பிற உள்ளாட்சித் தேர்தல்களில்... ஏன் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில்கூட என்று படித்த ஞாபகம்! எல்லாவற்றிலுமே ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. தோல்வி மேல் தோல்வி என கண்டுவந்தது. அதனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது. எனவே, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்கு போட்டியும்கூட! தொடர்ந்த தோல்விகளைச் சந்திக்கும் பா.ஜ.க., மறுபடியும் ஆட்சிக்கு வர இயலாது என்று மற்றவர்கள் போலவே பாஜக பெருந்தலைகளும் நம்பினர். அதனால், 'தனக்கு உரிய மரியாதை தரவில்லை' என்று கருதிய பாஜகவின் 'முன்னாள் பெருந்தலை' சங்கர்சிங் வகேலா, காங்கிரஸுடன் இணைந்து கொண்டு மாநிலத் தலைமையையும் கைப்பற்றினார். அந்நாளில் குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு, தகுதியான வேறு தலைவர் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அப்போது மத்தியில், மாநிலத்தில் என இரண்டு இடங்களிலும் பா.ஜ.க. ஆட்சி என்பதால், அவர்களது மாய்மாலங்களில் பழக்கப்பட்ட ஒருத்தரையே எதிர்தரப்பில் நிறுத்தினால்...? காங்கிரஸ் கட்சி, இதை தனது சாணக்கியத்தனம் என்று எண்ணிக்கொண்டு, பழைய காங்கிரஸ்காரர்கள் சிலரை சங்கடப்படுத்தி வகேலாவை தூக்கிப் பிடித்தது. 'இன்னும் சரியாக ஓராண்டுதான் இருக்கிறது, மாநிலத் தேர்தலுக்கு' என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டுவரும் பல வெற்றிகளுக்கும் காரணம் 'இன்னார்தான்' என அந்தந்த வட்டாரத்தில் முக்கியஸ்தர்கள் தங்களையே முன்னிறுத்திக் கொண்டிருந்தனர்.

மோடி செய்த யோகம். பிப்ரவரி மாதத்தின் ஒருநாளில் குஜராத் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸில் தீ! (இது திட்டமிட்டு செய்யப்பட்டதா? தற்செயலான விபத்தா? திட்டமிட்டு செய்தது என்றால் - செய்தவர்கள் ஹிந்து வெறியர்களா? முஸ்லீம் முரடர்களா? இந்த சம்பவத்தில் பாகிஸ்தானியர் கை இருந்ததா...? இல்லையா? இப்படி பல கேள்விகள், விடை தேடி விசாரணைக் கமிஷன் இருட்டுக்குள்ளிருந்து இன்னும் வௌதவரவில்லை. வருமா?) அதற்கடுத்து நடந்த சம்பவங்களையெல்லாம் மறுபடியும் ஒருமுறை சொல்லி... மனதில் ஓட்டிப் பார்த்து சங்கடப்படுவானேன்! ஆனால் இந்தச் சம்பவத்தையொட்டி கிளறிவிடப்பட ஹிந்துமத உணர்வின் ஈரம் காயும் முன்னே மஸ்தான் வேலையை காட்டிவிட்டார் மோடி!

அதாவது, இன்னும் சில மாதங்கள் இருப்பு இருந்த ஆட்சியைத் தியாகம் செய்து, சட்டசபைத் தேர்தலுக்கு வழிவகுக்க, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட இன்னும் ஒரு பெரும்படையே எதிர்தரப்பில் நின்று சத்தம் மட்டும் போட்டுவிட்டு நிர்கதியாகிவிட, அடுத்து நடந்த தேர்தலில் சூறாவளியாக வெற்றி வந்து மோடியைத் தழுவிக் கொண்டது. இடையில் சிக்கிய மற்ற கட்சிகள் கட்டுத்தனமாக கரையொதுக்கப்பட்டன. அந்த நேரத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலமே, இனி இவர்தானோ என்றெல்லாம் எழுத பத்திரிகைகளுக்கு துணிச்சல் வந்தது. ஒரு லோக்கல் மஸ்தான், மாநிலத்துக்கு வௌதயில் ஒரு பெருந்தலைவராக, வெற்றி வீரராக தெரியத் தொடங்கியது இந்த வெற்றியின் விளிம்பில்தான்.

அதன்பிறகு கர்நாடகம், ஹி.பி. ம.பி., ராஜஸ்தான் போன்ற பல மாநிலத் தேர்தல்கள் நடந்தபோது, இவர் முன்னணித் தலைவர் அந்தஸ்த்தில் தேசிய அளவில் நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார்.

அப்போதும் வெற்றிகண்ட மிதப்பில் பாராளுமன்றத்துக்கு முன்னதாக தேர்தல் என்று முயன்ற பா.ஜ.க., இதில் 'இந்தியா ஔதரவில்லை' என்பதைக் கண்டவுடனும் மறுபடியும் மோடிக்கு தலைவலி தந்தார்கள் பா.ஜ.க.வினரே! அப்போதும் அதை சமாளித்தார்.

அடுத்த சம்பவம் இப்போது! இம்முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநிலத்தில் கட்சியின் முன்னோடிகள் நாராயணன்சிங் ரானே, கேசவ் பாய் பட்டேல், சுரேஷ் மேத்தா என்று ஒரு பெரும்படை, திட்டமிட்டு வில்லாவாரியாக 'Modi Ouster' வேலை செய்து கொண்டிருந்தபோது - 'ஜார்ஜ் புஷ்' உருவில் தனக்கொரு ஆபத்பாண்டவன் வருவான் என்று மோடியேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இதைத்தான் 'விதி' என்ற கணக்கில் சொல்லி சேர்த்துக் கொள்கிறார்களோ!

மோடி, அமெரிக்கா போக விசா மறுத்தது - சரி, தவறு என்று பல விதமான காரணங்கள்... தர்க்கங்களோடு விவாதங்களும், கருத்து மோதல்களும் கூட நடந்தன. இந்த விஷயத்தில், எனது கருத்து பெரும்பான்மைக்கு எதிரானது (மோடிக்கு விசா மறுத்ததை ஆதரித்து, அமெரிக்காவை பாராட்டியதுதான் பெரும்பான்மை கருத்து என நினைக்கிறேன்). மோடியை கேள்வி கேட்க, அமெரிக்காவுக்கு என்ன உரிமையிருக்கிறது என்ற எதிர்கேள்வியைவிட, இந்திய அரசு சார்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில்தான் எனக்கு நம்பிக்கை. அங்கேதான் நானும் நிற்கிறேன். மோடிக்கு அமெரிக்கா விசா கொடுத்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில், நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு விசா தரலாமா, கூடாதா என்பது வேறு விஷயம். ஆனால் ஜனநாயக ரீதியாக நடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு, ஜனநாயக நாடு... ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா விசா மறுத்திருக்கக்கூடாது. மோடிக்கு விசா தர அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவுக்கு பின்னாளில்தான் அமெரிக்க நிர்வாகம் வந்திருப்பதாக சொல்லப்பட்டாலும், போராட்டம் நடத்தியவர்களுக்கு அந்த அனுமதியையும் கொடுத்து... கடும் பாதுகாப்புடன் மோடியின் திட்டங்களை சுருக்கிக்கொள்ள சொல்லி ஆலோசனையுடன் அமெரிக்கா அனுமதி தந்திருக்கவேண்டும். வேண்டுமானால், அதை ஒரு IF Clauseவுடன் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை.

இறுதியில், மோடிக்கு மரியாதை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் நடந்த அந்த சம்பவமும் கூட (விசா மறுப்பு), அவரது மஸ்தான் வேலைக்குத்தான் மறுபடியும் பயன்பட்டிருக்கிறது. 'குஜராத் அஸ்மித்தா!' என்று கோஷத்தை மறந்திருந்தவர்களுக்கு மறுபடியும் அதை ஞாபகப்படுத்தியது தவிர, வேறு எதுவும் இந்த தடையால் நடந்துவிடவில்லை. ஒரு வில்லன் சந்தர்ப்ப சூழலால், மறுபடியும் ஹீரோ(!)வாக மாறியதுதான் நடந்தது.

இந்த சம்பவம், இந்தியாவுக்கு அவமானம்! இல்லை, மோடிக்குத்தான் அவமானம்! அப்படியில்லை; மோடியைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவமானம்! ஏன் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கே அவமானம்!! இப்படி யார் என்ன சொன்னாலும், இறுதியான வீழ் படிவு - மோடிக்கு இந்த முறையும் தலை தப்பியது என்பதுதான்.

'மோடிக்கு விசா தரவேண்டும்; மறுபரிசீலனை செய்யுங்கள்' என பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டதை எதிர்த்து பலர் கருத்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வௌதப்படையாகவும் சொன்னார்கள். ஆனால் பிரதமரின் கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிப்பதோடு, அதைச் செய்யாமல் போயிருந்தால் கண்டித்திருக்கும் கோஷ்டியில் இடம் பெற்றிருப்பேன்.

இந்த விஷயத்தில் என்தரப்பு நியாயத்தைப் புரிய வைக்க, முற்றிலும் மாறுபட்ட சூழலில் - ஆனால் அடிக்கடி இதே போல சர்ச்சைக்குள்ளாகும்... கேள்வி எழும்... சூழலை வைத்து பேச விரும்புகிறேன்.

இங்கே விவாதம் - நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் தளத்துக்கு இடம் மாறுகிறது. இதில் தீவிரவாதிகள், போலீஸார் இருவருக்கும் இடையில் நடக்கும் தொடர் போராட்டங்களில்... அது ஆந்திர நக்ஸலைட்டுகளோ, வீரப்பன்கள் வகையறாவோ, மற்றவர்களோ... இவர்கள் மீதான encounterகள் நடக்கும்போது பெரும்பாலானவை Fake encounter என்றோ... போலிஸார் இன்னும் சற்றே பொறுமை காட்டியிருக்கலாம் என்றோ... அல்லது தீவிரவாதிகளிடம் வரம்பு மீறி, அடக்குமுறையைக் கையாண்டனர் என்றோ.... மனித உரிமைகள் மீறப்பட்டன என்றோ... தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டால்... அதில் சந்தேகங்கள் எழுந்தால்... இப்படி பல விஷயங்களில் போலீஸார் மீது குறை சொல்லப்படுவதுண்டு. அந்த மாதிரி நேரங்களில், நான் அறிந்த வரையில் பல விவரமானவர்களும்கூட 'மனித உரிமை' என்ற வார்த்தை உச்சரிக்கப்படுவதைக் கேட்டதும்... 'அதே மனித உரிமை, சம்மந்தப்பட்ட போலீஸாருக்கு இல்லையா? தீவிரவாதி ஒரு காரியத்தை செய்துவிட்டால் அதை பேச மாட்டார்கள். ஆனால் அதே காரியத்தை அந்த போலிஸார் செய்துவிட்டால், மனித உரிமை என்கிறார்கள். அப்படியானால் போலிஸாருக்கு மனித உரிமை... வாழும் உரிமை கிடையாதா? தன் உயிரைக் காத்துக் கொள்ள எதிரியைத் தாக்க சட்டத்தின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.அந்த நேரத்தில் போலீஸார் சுடாமல் விட்டிருந்தால் தீவிரவாதி இவர்களைச் சுட்டிருக்கலாம் என்று பதில் கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக - தில்லி திரையரங்கு ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம், வீரப்பன் விவகாரத்தில் பலமுறை, ஆந்திர நக்ஸலைட்டுகள் விவகாரத்தில்... கடந்த ஆண்டுக்கு முன் தர்மபுரியில் தமிழக போலிஸார் எடுத்த சில நடவடிக்கைகளில் இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் எனது வாதம் இதுதான். தீவிரவாதிகள், வீரப்பன்... நக்ஸலைட்டுகள்... போன்றவர்கள் அந்தந்த முத்திரையைச் சுமந்தவர்கள். அவர்கள் தவறு செய்துவிடலாம்; சட்டத்தை மீறிவிடலாம். ஆனால் 'சாமி' படத்து வசனம் போல - போலீஸ், 'பொரிக்கி'யாகிவிடக்கூடாது! அரசு சார்பில் அதன் யூனிபார்மைச் சுமக்கும் அதிகாரிகள் மற்றவர்கள் போல அதே பொறுப்பற்ற தவறைச் செய்துவிடக்கூடாது. இதற்காகத்தான் போலிஸாரைத் தேர்ந்தெடுத்து... பயிற்சி கொடுத்து... சம்பளம் கொடுத்து... பிற சமூக பாதுகாப்பு கொடுத்து... பணியில் இறந்துபோனால், அதற்கு இழப்பீடு கொடுத்து... இதெல்லாம் கொடுத்து அவர்களை அரசுப் பணத்தில் பராமரிப்பது! 'எதிராளி' தவறு செய்கிறான் என்பதால் - அதே தவறை 'இவர்களும் செய்யக்கூடாது' என்பதற்காகத்தான் இதெல்லாம். அதற்காக, 'அவன் முன்னால் போய் நின்று குண்டடிப்பட்டு செத்துப் போ!' என்று சொல்வதாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

'சட்டம் எல்லாருக்கும் சமம்; அவன் சட்டத்தை மதிக்கவில்லை. கையில் எடுத்துக் கொண்டான்' என்பதற்காக போலீசும் அதைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் முக்கியம். இங்கே போலீஸ் - ஒரு அரசை, நாட்டை, நிர்வாகத்தை முன்னிறுத்துகிறது என்பதுதான் முக்கியம். தனிநபர் தவறு செய்வதற்கு போட்டியாக, ஒரு நாடு தவறு செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.

இப்போது இதே analogyஐத்தான் மோடி விஷயத்திலும் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். மோடி என்ற தனிநபர் தவறு செய்திருக்கலாம்; ஆனால் அந்த தவறைச் சுட்டிக்காட்டி, ஒரு நாடு தவறு செய்துவிடக்கூடாது. இது காலகாலத்திற்கும் தவறான ஒரு முன்னுதாரணமாக நின்றுவிடும்.

மோடி என்ற தனிநபர் செய்த காரியத்தை கண்டிக்கும் நோக்கில், அவர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்திருக்கும் வெறுப்பின் கண்ணாடி வழியே பார்க்கையில் அவருக்கு விசா வழங்காதது நியாயமாகத் தெரிந்தாலும், அவர் ஒரு ஜனநாயகத் தேர்தலில் வென்று வந்த ஒரு மாநில முதல்வர் என்ற வகையில்.. முதல்வருக்கான எல்லா அனுகூலங்களும், மோடிக்கும் கிடைக்க நினைப்பதுதான் ஜனநாயகத்தை மதிப்பதாக இருக்கும்.

இந்த விஷயத்தில்தான் அமெரிக்காவிற்கு செல்ல, மோடிக்கு விசா தர மறுத்த அமெரிக்காவை எதிர்க்க வேண்டும். ஆனால் அவருக்கு விசா தர எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க வாழ் இந்தியர் அனைவரையும் பாராட்டுகிறேன். தடைகோருவது அவர்களது உரிமை; அதை ஏற்பதும் ஏற்காததும் அந்நாட்டு அரசின் நிர்வாகத்தின் பொறுப்பு. தனது பொறுப்பில் எப்போதும்போல, இந்த முறையும் அமெரிக்கா தவறிழைத்திருக்கிறது. இதன்மூலம் அறியாமலேயே அது எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் மோடிக்கு உதவியிருக்கிறது.

இவ்விஷயத்தில் இங்கிலாந்தும் இம்முறை தவறு செய்யவில்லை என்பது ஆறுதல் தருகிறது. அப்படி நடந்திருந்தால்...!

நல்லவேளை! ராஜினாமா செய்து இன்னொரு தேர்தல் கோரும் அந்தஸ்த்தில் பா.ஜ.க. இன்று இல்லை. இருந்தால், இதையே காரணம் காட்டி இன்னொரு முறை ஆட்சிக்கு வர முயற்சி செய்வார்கள்!

வெள்ளி, மார்ச் 25, 2005

காப்புரிமை கலாட்டா ஏன்? - II

கடந்த 22ந்தேதி நாடாளுமன்றத்தில் பாஸானது 3வது சட்டத்திருத்தம் என்று ஏற்கெனவே சொன்னோம். இதிலிருந்தே இதற்கு முன்பு இரண்டு திருத்தங்கள் நடந்துள்ளன என்பது புரியும். அதில், முதல் திருத்தம் 1999ல். இரண்டாவது 2002ல் நடந்தது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. ஆட்சி நடந்தது. 3வது திருத்தத்தின் மூல வடிவம்கூட தேஜகூ.வினர் தயாரித்ததுதான். ஆனால் அதற்கே எதிர்ப்பு தெரிவித்துதான் நாடாளுமன்றத்தில் வௌதநடப்பு செய்தனர் பா.ஜ.க. & தோழர்கள். அந்த 'பாலிடிக்ஸை'த் தனியாக வைத்துக் கொள்வோம்.

எனினும் இப்போது பாஸான சட்ட வடிவம், பாஜக தயாரித்த ஆரம்ப, மூல வடிவம் அல்ல. அது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கம்யூனிஸ்ட்களும் மற்ற சிலரும் கிட்டத்தட்ட 10 மாற்றங்கள் வரைக் கேட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. மீதி உள்ளதை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்கள். தேவைப்படும்போது, பின்னாளில் இன்னொரு திருத்தம் வரும்.

சரி! கம்யூனிஸ்ட்டுகளால் கொண்டுவரப்பட்டு ஏற்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

முதல் விஷயம் - கடந்த கட்டுரையின் முடிவில் சொன்ன பன்னாட்டு மருந்துப் பொருள் நிறுவனங்கள் செய்து வரும் சதிக்கு 'மருந்து'.

இப்போதைய Product Patentபடி, 1995க்குப் பிறகு புதிதாக காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் எதுவானாலும் அவற்றை கண்டுபிடித்த / உருவாக்கியவருக்கு காப்புரிமைத் தொகை தரப்படவேண்டும். இது கட்டாயமாகிறது. இந்தவகையில், 1995 தொடங்கி, 2004வரை 6989 மருந்துப் பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டதாக / கண்டுபிடிக்கப்பட்டதாகக் காப்புரிமை பெற்றுள்ளன (இத்துறை தகவல்). இவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகள் என கோரிக்கை வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் வெறும் 250 பொருட்கள் மட்டுமே நிஜமாகவே புதிதாம். மற்றவையெல்லாம் ஏற்கெனவே ஏதோ ஒருவகையில் மருந்து பொருட்களாகப் பயன்பட்டு வந்தவைதான். காப்புரிமை பெறும் பொருள் 20 ஆண்டுகள் வரை ராயல்டி பெறலாம் என்பதால், விரைவில் காலாவதியாக உள்ள (மேலுள்ள கணக்கின் மீதி) பொருட்களுக்கு சின்ன சின்ன டிங்கரிங் வேலை செய்து, அதையே புதிய பொருள் என்று சொல்லி, இன்னும் ஒரு 20 வருடத்துக்கு ராயல்டி வாங்கி கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள் பன்னாட்டு மருந்து பொருள் நிறுவனங்கள்.

டிங்கரிங் வேலை என்பது - அதே பொருள் வேறொரு நோய்க்கு மருந்தாகிறது என்றோ (சளி மருந்தால் - தலைவலிக்கு நிவாரணம்... வயிற்று வலி போகும் என்பது போல), பழைய பொருளின் மூலக்கூறில் சின்ன மாற்றம் செய்தோ, அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்களை கூட்டி, குறைத்தோ... இப்படித்தான் இருக்கின்றனவாம். அவ்வகையில் இது, 'புதுசு கண்ணா... புதுசு' என்று காட்டி, இன்னும் 20 வருஷம் 'அட்ரா சக்கை' என்று வாரிக் கொட்டலாம் என்பது திட்டம். இதை இத்துறையில் Evergreening என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். அதாவது, எந்நாளைக்கும் பசுமையாக... காமதேனுவாக ஒரு மருந்துப்பொருளை வைத்திருப்பது! கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தியபிறகு 22ந்தேதி பாஸான சட்டப்படி, இனி ஒரு மருந்துப் பொருளை எந்நாளுக்கும் பசுமையாக வைத்திருக்க பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சி, தந்திரம் செல்லுபடியாகாகது. எனவே உத்தேசமாக வெறும் 250 பொருட்களுக்கு மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்த விஷயம் - Embedded Software. (இதுபற்றி இணைய நண்பர்கள் பலருக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கலாம்) தனியொரு நிறுவனத்தின் தேவைக்காக எழுதப்படும் மென்பொருள் போல அல்லாமல், செல்போன் போன்ற பொது பயன்பாட்டுக்கான பொருட்கள் இயங்க எழுதப்படும் மென்பொருள்களை இவ்வகையில் சேர்க்கலாம். எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு மெஷினில் இருப்பதும்கூட இவ்வகைதான். இவற்றை யார் வேண்டுமானாலும் அப்போதைய தேவைக்காக இஷ்டப்படி மாற்றுவது இயலாது. அதேபோல, அடிக்கடி புதிதாக மென்பொருள்கள் வரிசைகளை அறிமுகப்படுத்துவதும் அரிதானதுதான். எனவே, இவ்வகையிலும் இனி பலவற்றுக்கும் காப்புரிமை கோர முடியாது.
தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது இந்த வகையில் தேருமா தெரியவில்லை. முதலில் முத்து நெடுமாறன் இந்த மாதிரியான முயற்சியில் இருக்கிறாரா... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அடுத்து - ஒரு பொருளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இடையிலேயே மறுப்பு சொல்லி வேறு யாரும் அதற்கு தடங்கல் செய்ய முடியாது என்று இருந்த வாசகம் வாபஸாகி விட்டது. இதுதான், 'மஞ்சள்களுக்கும்', 'வேப்பிலைகளுக்கும்' இனி யாராவது காப்புரிமை கோரினால் அதை தடுக்கப் பயன்படும் அம்சம். அதிருஷ்டவசமாக, இந்திய காப்புரிமை சட்டத்தின் இன்றைய வடிவில் - ஒரு பொருள் காப்புரிமைக்கு காத்திருக்கும் போதும், அதைப் பெற்ற பின்னரும் - மறுப்பு, எதிர்ப்பு தெரிவிக்க முடியும். பல நாடுகளில் இப்படியில்லை.

இதேவகையில், எதிர்பாராத சூழலில் சார்ஸ்... அல்லது பறவை ஜுரம் (Bird flu) போன்ற ஏதாவது புதிய நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவ நேர்ந்தால், அந்த நேரத்தில் அவசர, அத்தியாவசிய காரணங்களுக்காக - காப்புரிமை பெற்ற மருந்துப் பொருளின் Generic வடிவம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு அனுமதி உண்டு. இதை Compulsary Licence முறை என்கிறார்கள். அடுத்து ஒரு நாட்டில் மருந்து உற்பத்திக்கான முறையான தொழிற்சாலைகளே இல்லை எனும்போது, ஆர்டரின் பேரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திக்கும் அனுமதி உண்டு. இப்படியான சிலவற்றுக்கும் முழு ராயல்டி கேட்டு, இனி கழுத்தை நெரிக்க முடியாது. ராயல்டியில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு காப்புரிமைக்காரர் வாய்மூடி இருக்க வேண்டியதுதான் - குறிப்பிட்ட காலம் வரை. ஆனால் இந்திய அதிகார வர்க்கத்திடம் compulsary license அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே என்பது, பலநாட்டு மருந்துப் பொருள் இறக்குமதியாளர்களின் கவலை.

அதேபோல, தாவர வகைகள் குறித்த காப்புரிமை கோரும் அம்சங்கள் இந்த சட்டவரம்புக்குள் வராது என்பது மிகவும் தௌதவாக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் கோரி ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படிமாற்றங்கள் தவிர, தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் இன்னும் நுட்பமானவை. அவசர கதியில் முடிவுக்கு வரக்கூடாது என்பதால், நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அவை அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது நுண்ணுயிரிகள் குறித்த காப்புரிமை. அதாவது, வைரஸ், பாசிவகை போன்ற இன்னும் பல சின்னஞ்சிறு உயிரிகள் குறித்தவை. அதேபோல, முற்றிலும் புதிதான மருந்து / வேதியியல் பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை அனுமதிக்கப்படும் என்பதில் 'புதிதானவை' என்றால் என்ன, அதன் அடிப்படை தேவை என்ன என்பதற்கும் இன்னும் தௌதவான விளக்கம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் வரவிருக்கும் நாட்களில் பொது விவாதத்திற்கும், நிபுணர் ஆய்வுக்கும் உட்படும்.

எப்படியானாலும் இந்தியாவின் பழைய காப்புரிமை கதைகள் காலாவதியாகிவிட்டன. அவ்விடத்தில் புதிய சவால்கள் தவிர்க்க முடியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தோஹா தீர்மானத்தில் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 'அறிவுசார்ந்த சொத்துரிமை' அம்சங்களின்படியே கூட, இன்னும் பலவகையிலும் திட்டமிட்டு - ராயல்படி பிசாசிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் நிபுணர்கள் பலரது கருத்தும். இதற்கான வழிகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காப்புரிமை விஷயத்தில் இத்தனை கலாட்டாவும், கூச்சலும்.

வியாழன், மார்ச் 24, 2005

'காப்புரிமை' கலாட்டா ஏன்?

என் நினைவில் இருப்பது சரியென்றால், காப்புரிமை விஷயத்தில் இந்தியாவில் கூச்சல் தொடங்கி 6 வருடத்துக்கு மேலாகிறது. 1999 இறுதியில் என்று ஞாபகம். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 'ரைஸ்டெக்' என்ற நிறுவனம், பாசுமதி அரிசி குறித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்தது. இதனால், காலகாலமாக பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையில் உலக அளவு முன்னோடிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், இனி உலக சந்தையில் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதாவது, இனி இந்தியாவில் விவசாயிகள் பாசுமதி அரிசி பயிரிட்டால், அதற்கு ரைஸ்டெக் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றார்கள். அப்போது, CSIR-ன் இயக்குனராக இருந்த மஷோல்கர், சுற்றுப்புற சூழல் ஆர்வலர் வந்தனா சிவா உள்ளிட்ட ஒரு குழு, இது சம்மந்தமாக கோர்ட் படியேறி போராடி அந்த காப்புரிமையை கேன்சல் செய்தனர். ஆனாலும், ரைஸ்டெக் நிறுவனம் தங்களது உற்பத்தியை 'பாசுமதி மாதிரி' என்று முத்திரை குத்தி விற்க வருவதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்து, காயத்தை ஆற்ற பாரம்பரியமாக இந்திய கிராமங்களில் பயன்படுத்தப்படும் மஞ்சளை, 'ரண நிவாரணி' என, எதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி 'யூனிவர்சிட்டி ஆஃப் மிசுசிபி மெடிக்கல் சென்டர்', 1993ல் அப்ளை செய்திருந்த காப்புரிமை விஷயம் சந்திக்கு வந்து... அதற்கும் சட்ட ரீதியில் போராட்டம் நடந்து அதுவும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கும் மஷோல்கர்தான் படையை நடத்திச் சென்றார்.

இப்படி வேப்பிலை, இந்திய 'டார்ஜிலிங் டீ' என்று பலப் பொருட்களுக்கு படையெடுக்க வேண்டியிருந்தது கடந்த காலங்களில். மேற்கண்ட எல்லாமே, நம்ம பாட்டன்கள் நமக்கு விட்டுவிட்டுபோன சொத்துக்கள்.

பின்னாளில், ஆங்கில மருத்துவ முறைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் ஆட்சி செலுத்த வந்தவுடன், இன்று அவை குறித்தும் அதே சத்தம் கேட்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. கடந்தமுறைகள் போலன்றி, வலுவான ஆயுதங்கள் எதுவும் கையில் இல்லாமல், 'ஏழைகளான எங்களை சும்மாவாச்சும் சுரண்டித் திங்காதீங்கப்பா!' என்ற ரீதியில் இருக்கிறது தற்போதைய போராட்டம். அதாவது, உரிமையுடன் கத்த முடியாதபடிக்கு.

எல்லாம் WTO என்ற உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்ந்ததன் விளைவுதான். (இப்படி சொல்வதானால் எனக்கு சிவப்பு கலரடிக்க யாராவது முயன்றால் ஸாரி! வெட்டிவேலை. WTO முடிவால் இந்தியாவுக்கு பலன்களும் உண்டு என்பதை மறுக்காதவன் நான்) உலக வர்த்தக ஒப்பந்தப்படி, TRIPS எனப்படும் - அறிவு சார்ந்த சொத்துரிமையை இந்தியா மதித்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு ஆராய்ச்சி செய்து, புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நபருக்கு, அந்த பொருள் மீதான காப்புரிமை இருப்பதை மதித்து போற்றி, அதற்கான விலையை இந்தியாவும் தர வேண்டும் என்பது. 2005 முதல் இந்தியா இந்த முழு காப்புரிமை சமஸ்தானத்துக்குள் நுழைகிறது.

இங்கே காப்புரிமை என்று சொல்லும்போதே, இதில் இரண்டு வகையிருப்பதையும் சொல்ல வேண்டும். ஒன்று - உருவாக்கப்பட்ட பொருள் குறித்த முழு காப்புரிமை. Product Patent. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற பல WTO அங்க நாடுகளிலும் தற்போது நடைமுறையில் இருப்பது. இலங்கை உட்பட. இரண்டு - புதிதாக உருவான பொருளைத் தயாரிக்கும் வழிமுறை மட்டும் பற்றிய காப்புரிமை. Process Patent. கடந்த 2004ம் ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்த இரண்டாவது தளத்தில்தான் இருந்தது.

இந்த இருவகையையும் இன்னும் தௌதவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்லலாம். நமக்கு, சென்னையிலிருந்து தலைநகர் தில்லி செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பல வழிகள் உண்டு. ஒன்று - நேரடியாக விமானம் ஏறி, தில்லியில் இறங்குவது. மற்றொன்று - சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், அல்லது ஜிடி.யைப் பிடிப்பது. இது தவிர - வசதியும், நேரமும் இருப்பவர்கள்,சாவகாசமாக ஒரு கார் எடுத்துக் கொண்டு, வழியில் இருக்கும் பல ஊர்களையும் பார்த்துக் கொண்டு செல்லலாம். வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆக, நமது இறுதி இலக்கு - தில்லி செல்வது. அதற்கு இருக்கும் பல வழிகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பது போல, ஒரு பொருளை தயாரிக்கவும் பலமுறைகள் உள்ளன. அதில் அந்த பொருளைக் கண்டுபிடித்தவர் கையாண்ட வழியல்லாத மற்ற முறையில் அந்த பொருளைத் தயாரிக்கும் முறை இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி, அது வேலைக்காகது.

இப்போது இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கும் புதிய காப்புரிமை முறையை நடைமுறையாக்க, ஏற்கெனவே அமலில் இருந்த 'இந்திய காப்புரிமை சட்டம் 1970'ல் திருத்தங்கள் கொண்டு வருகிறார்கள். கடந்த வாரத்தில் (மார்ச் 22ந் தேதி) நாடாளுமன்ற மக்களவையிலும், மறுநாள்
மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த 3வது திருத்தம்தான் இந்தியாவை Product Patent வரம்புக்குள் தள்ளுகிறது. மாற்றம் நடப்பது இந்தியாவில்தான் என்றாலும், இந்தியர் அல்லாத மற்ற பலரும் இது குறித்து கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தத்திற்கு முன்பு நைரோபி நகரில் இந்திய தூதரகம் நோக்கி ஒரு பேரணியே கிளம்பியது. தர்ணா போராட்டமும், மற்றவகை எதிர்ப்பும் அதிகம் இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம், இந்தியா அண்மைக் காலம்வரை விலை மலிவாக உலக சந்தையில் சப்ளை செய்து வந்த மருந்து பொருட்கள்தான்.

பொதுவாக உலக சந்தையில் மருந்து பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அந்த மருந்து பொருளைத் தயாரிக்கவும், அதற்கான ஆரம்ப கட்ட ஆராய்ச்சிக்கும் மிக அதிகமாக செலவிடுவதாகச் சொல்லி, அந்த காசையெல்லாம் திரும்ப எடுக்கவும், கூடுதலாக லாபம் பார்த்து, அடுத்த சில ஆராய்ச்சிகளுக்கு செலவழிக்கவும் வேண்டி தாங்கள் கண்டுபிடித்த புதிய மருந்து பொருளுக்கு, ஒன்றுக்கு பத்தாக விலை வைத்துதான் சந்தையில் விற்பார்கள். இது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு வேண்டுமானால் கட்டுபடியாகலாம். உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் ஏஆர்வி (ARV - Anti-retroviral drug) மருந்துகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் தயாராகும் இவ்வகை மருந்து, மாதம் முழுமைக்கும் 1000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்க, Product Patent கொண்ட மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. அன்றாடம் வயிற்றுக்கே போராடும் மக்கள், அந்த விலை கொடுத்து வாங்கி என்னத்தை செய்ய?

அதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளும்... நம்மைவிட மோசமான நிலையில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் மக்களும் அவ்வளவு விலை கொடுத்து மருந்து பொருட்களை வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் நம்மைப் போன்றவர்களும் நோய் நொடி தவிர்த்து வாழ, மருந்துகள் தேவைப்பட்டால், அதை உட்கொண்டுதானே ஆக வேண்டும். அதற்கு இத்தனை நாட்களாக நாம் கையாண்டு வந்த முறை - அதே மருந்தை மாற்றுவழிகளில் தயாரிப்பது என்பதுதான். இங்கேதான் Process Patent நமக்கு அனுகூலமாக இருந்தது. அதே மருந்தை வேறு வழிகளில் தயாரித்து நாமும் உட்கொண்டு, மற்ற நாடுகளுக்கும் அளித்து வந்தோம். இந்த மருந்துகளைத்தான் Generic drugs என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இவ்வகையில், உலகநாடுகளில் அதிக மருந்துப் பொருள் தயாரிக்கும் நாடு என இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. பொருள் அளவில் 4வது இடத்தைப் பிடித்தாலும், அவற்றின் விலை மதிப்புப்படி உலகின் 13வது நாடாகத்தான் இருக்கிறது. அமெரிக்காதான் மருந்துப் பொருள் உற்பத்தியில் அதிக வருவாய் பெறும் நாடு. ஒரு புள்ளிவிவரக் கணக்குப்படி, இன்றைய உலகின் மொத்த மருந்துப் பொருள் உற்பத்தி மதிப்பான 300 பில்லியன் அமெரிக்க டாலரில், அமெரிக்கா மட்டும் 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவருகிறது.

இந்தியாவில் எவ்வளவு விலை குறைவாக, அதே நேரத்தில் தரமானதாகவும் மருந்துப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்பதற்கு இன்னும் சில புள்ளிவிபரங்களும் தரலாம். மற்ற நாடுகளில் புதிதாக ஒரு மருந்துப் பொருள் தயாரிக்க 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கும் என்றால், அதே மருந்துக்கு மாற்றாக இந்தியாவில் ஒரு generic மருந்து தயாரிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர்தான் செலவாகிறது என்பது மருந்துப் பொருள் தயாரிப்புத் துறையினரது தகவல் என்கிறது வணிக நாளிதழ் பிஸினஸ் ஸ்டாண்டர்ட். எத்தனை மடங்கு குறைவு என கணக்கிடுங்கள்! இதையெல்லாம் சொல்வதனால் இந்தியாவில் செய்வதெல்லாம் இந்த 'உல்டா' வேலை மருந்துகள்தானோ என்று எண்ணி விடாதீர்கள். இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக..., குறிப்பாக '2005 கெடு' நெருங்குகிறது என்ற ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் பல நிறுவனங்கள் சொந்தமாக ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இவர்களாக ஆராய்ந்து வெற்றி பெற்று, மற்ற நாட்டு நிறுவனங்கள் போலவே புதிய மருந்து பொருட்களைத் தயாரித்து விற்று வருகிறார்கள்.

சரி! நாமாகவும் புதிய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். மற்ற நாடுகளின் மருந்துகளுக்கு மாற்றாக வேறுவழிகளில் விலைகுறைவான மருந்துப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறோம். அப்படியிருக்கையில் எதற்காக இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்? இதில் அர்த்தம் இருக்கிறதா? இந்திய நிறுவனங்கள் மற்றவர்களின் மருந்துகளை உல்டா பண்ண அனுமதிக்கவில்லை என்பதுதான் இந்த கூச்சலுக்கெல்லாம் காரணமா? இப்படியெல்லாம் கூட கேட்கத் தோன்றலாம். அடுத்து, இந்த மாதிரி உல்டா வித்தைகள் எல்லாம் இனியும் அவசியம்தானா என்றும் கேட்கலாம். அதற்கு அவசியம் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், பன்னாட்டு மருந்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்தான்.

இதை பற்றியும், இன்னமும் அடுத்த பகுதியில்....!

வியாழன், மார்ச் 17, 2005

எந்த பசிக்கு சோறு போடுகிறார் ப.சி.!?

ப.சிதம்பரம் தாக்கல் செய்த அண்மைய பட்ஜெட் பற்றி பொதுவான கருத்து - கிராமப்புற வளர்ச்சிக்கும், அதன் அடிப்படைத் தேவைகளுக்கும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்பதே! கம்யூனிஸ்ட்டுகளுடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொதுத்திட்டத்திற்கு முடிந்தவரை இந்த பட்ஜெட்டில் நியாயம் செய்யப்பட்டுள்ளது என்றால் கூட, அநியாயம். சற்று கூடுதலாகவே இறங்கி வந்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதைத் தாண்டி, இன்னொரு விஷயமும் இந்த பட்ஜெட்டில் தொக்கிக் கிடக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது; உறுதியாக நம்புகிறேன். அது - பங்குசந்தைக்குள் அதிக பணம் பாய, ப.சிதம்பரம் கொஞ்சம் முன்ஜாக்கிரதையாகவே மடை மாற்றுகிறார் என்பதுதான். என் சந்தேகத்துக்கு அடிப்படைகள் இல்லாமல் இல்லை.

சிதம்பரம் மடை மாற்றுகிறார் என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு நிதியமைச்சர்..., அதிலும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையிலிருக்கும் ஒரு நாட்டின் நிதியமைச்சர் கட்டாயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய திசையில்தான் அவரது நடவடிக்கை இருப்பதாகவே நினைக்கிறேன். முதலில் எந்தவகையில் பணம் இனி பங்குசந்தைக்குள் அதிகமாக பாயும் என்று நான் நம்புவதைச் சொல்லிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருகிறேன்.

தனிநபர் வருமான வரி முகப்பை, ஒரு லட்சம் என்று உயர்த்தியிருக்கும் சிதம்பரம் - கூடவே இன்னும் ஒரு சலுகையும் தந்துள்ளார். அது, அடுத்து 1 லட்ச ரூபாய்வரை சேமித்து, முதலீடு செய்பவர்களுக்கு - அந்தத் 'தொகை'க்கும் வருமான வரி இல்லை என்பது. சேமிப்புக்கான இந்த சலுகை, முற்றிலும் புதிதானதல்ல. கடந்த ஆண்டுகளிலெல்லாம் கூட, சேமிக்கப்படும் தொகைகளில் - இன்ஸ்யூரன்ஸ் என்றால்... 'இவ்வளவு!'. அதில் பென்ஷன் பாலிசி என்றால்... 'இப்படி!'. சிறுசேமிப்பு பத்திரமா?... 'இந்தா, பிடிச்சிக்கோ!'. வரி சேமிக்கும் பாண்ட்களில் பணம் போட்டால் - 'இந்த மட்டும்', என ஒவ்வொன்றுக்கும் ஒரு வரம்பு இருக்கும். சலுகை தரப்பட்டது.

இப்போது அந்த மாதிரியான வரம்புகள் எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டார் சிதம்பரம். யாருக்கு எந்த வகையில் தேவையோ, ஆர்வமோ, தெரியுமோ அந்த வகையில் இஷ்டம்போல முதலிட்டுக் கொள்ளலாம். கதவு திறக்கப்பட்டுவிட்டது.

இதனால் ஏற்படும் நிகர விளைவாக என்ன இருக்கும் என்றால் - வரி சேமிப்பு கட்டாயத்துக்காக குறைந்த வட்டியும், வருவாயும் தரும் பாண்ட் போன்றவற்றில் இனி யாரும் முதலிட மாட்டார்கள். அல்லது யோசிப்பார்கள். மாநில அளவில் சிறுசேமிப்பு திட்டங்களில் போடப்படும் பணத்தின் அளவும் கணிசமாகக் குறையும். இப்படி பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருந்த குறைந்த வருவாய் பெற்ற பணமெல்லாம் இனி 1. வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அல்லது 2. பரஸ்பர நிதித்திட்டம் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் 3. இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் என்ற வகையில் மட்டுமே அதிகமாக திரும்பக்கூடும். இதில்கூட, எண் 1ம், 3ம் எதிர்கால மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதிதான். மற்றபடி, பெரும்பாலோர் அதிக லாபம் ஈட்ட எண்ணி 2வது வகை திட்டங்களை நாடுவது அதிகரிக்கப் போகிறது. இன்னும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டால், அப்புறம் ரியல் எஸ்டேட் போல திசை மாறக்கூடும். மற்றபடி ஓராண்டில் அனுமதிக்கப்படும் சேமிப்பான ஒரு லட்சத்தில் அலுவலகத்திலேயே கட்டாயப் பிடிப்பான தொகைகள், வீட்டுக்கடன் போன்ற இதர இனங்கள் எல்லாம் போக, மீதி கிடைப்பதில் பொதுவாக பெருந்தொகைகளை எதிர்பார்க்க முடியாது. அது போன்ற தொகைகள் சேமிக்கப்படும்போது கிடைக்கும் தொகைக்கு இந்த வழிகள்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி! ஆனால், அந்த அளவுக்கு நம் மக்களிடம் விழப்புணர்ச்சி இருக்கிறதா என்று கேள்வி எழுந்தால் சரிதான்.

மேலே விவாதிக்கப்படும் தரப்பினரெல்லாம் மாத ஊதியம் பெற்று, முறையாக வருமான வரி செலுத்தும் ஆட்கள் என எடுத்துக் கொண்டு இந்த கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இத்தரப்பினரிடையே ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் போன்ற சேமிப்பு பழக்கங்கள் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையான அனுமதிப்படி, இத்துறையில் 10 ஆயிரம் வரை முதலிட்டு அதிகபட்சமாக 2000வரைதான் சலுகை பெறலாம் என்பதால், அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும், குறைவாக முதலிட்டவர்களும் கூட இனி தங்கள் பார்வையை திசை திருப்புவார்கள். இவர்கள் பாதுகாப்பு கருதி நேரடியாக பங்குசந்தைக்குள் போகாவிட்டாலும் மியூச்சல் பண்ட்கள் வழிகளையும் தவிர்க்க வாய்ப்புகள் குறைவே! அத்துடன் தற்போது தனியார்த்துறை இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என ஏகத்துக்கும் வந்துவிட்டபின், இவர்கள் - விளம்பரங்கள் மூலமே எல்லாருக்கும் தகவல் தந்து அவர்களிடம் பணம் புரட்டும் வேகத்தை அதிகரிப்பார்கள். இந்தப் பணம் எல்லாம் அடுத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்குசந்தைக்குள்தான் பாயும். கவனத்தில் கொள்க - வரி செலுத்தும் ஒவ்வொருவரும் அதிக பட்சமாக 1 லட்சம்வரை கூட இங்கே முதலிடலாம். அப்படியானால் மொத்தத் தொகை எவ்வளவு திரள வாய்ப்பிருக்கிறது? கணக்கு போடுங்கள்.

அடுத்தும், தற்போது புதிய அணுகுமுறையாக, வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் தொகுப்பையும் பங்கு சந்தையில் முதலிட அனுமதிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதே போல, ஓய்வூதியத் துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்து, தனியார்த்துறை இவ்வகையில் செயல்படும் வேகத்தையும், விவரத்தையும் மேம்படுத்தத் திட்டமிடப்படுகிறது. எனவே இந்த எல்லா பணமும் கடைசியில் 'ஜிஜிபாய் டவர்-ஐ தவிர, வேறு எந்த திசை நோக்கி போகமுடியும்! போட்டி பெருகுவதால் எல்லாருக்கும் அதிக லாபம் ஈட்டித்தர வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

'சிதம்பரத்தின் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம்' என நான் நினைக்கும் கருத்துக்கு ஆதாரமாக நிறுத்த இவை மட்டுமேயல்ல; இன்னும் சில விஷயங்களையும் சொல்ல நான் விரும்புகிறேன்.
இந்த பட்ஜெட்டில்தான் முதன்முறையாக அவர் அறிமுகப்படுத்தும் இன்னொரு அம்சம் - தங்கப் பங்குகள் (Gold Units). இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தெரிந்த பொதுவான முதலீடு - தங்கம் வாங்குவதுதான். அதை குறைந்த பட்சமாக ரூ.100 விலையிலும்கூட, (பரஸ்பர நிதி திட்ட பங்குகள் போல) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் - அது மௌ஢ள மௌ஢ள மற்ற வகை பங்குகள் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொடுக்கும். அதனால், அடுத்தடுத்த கட்டமாக மெல்ல பரஸ்பர நிதி என்று பயணம் செய்து, அடுத்து நேரடி பங்கு முதலீட்டு எல்லையை எட்ட வழிவகுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அந்தவகையில் தங்கபங்குகள் - ஒரு 'ஆரம்ப பாடசாலை'யாக கட்டாயமாக இருக்கும் என நினைக்கிறேன். ரிசர்வ் வங்கிக்கும், செபிக்கும் இந்த பட்ஜெட்டில், இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து, சிதம்பரம் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள மற்றொரு பங்கு சந்தை ஊக்க மாத்திரை -பங்கு வர்த்தகத்தின் ஒருவகை நீட்சியான டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் இனி, ஊக வணிக வகையில் சேராது என்று சொல்லியிருப்பது. இதனால் ஊக வணிகத்தால் உள்ள இடைஞ்சல் நீங்கி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் அதிகரிக்கும்.

இந்த மாதிரி கன்னாபின்னாவென பணம் பாய்ந்தால், அதைக் கையாள்வதில் பங்குசந்தை இடை அமைப்புகளான தரகர் உள்ளிட்டவர்கள் தடுமாறிவிடக்கூடாது என, இதுகுறித்த முறையான 'பாடசாலை' ஒன்றை உருவாக்கவும் அறிவிப்பு வந்துவிட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்' என்ற அந்த அமைப்பை 'தேசிய மூலதன கல்வி நிறுவனம்' என்றா... அல்லது வேறு எப்படி தமிழில் சொல்லப் போகிறார்கள் தெரியவில்லை. அதில், இந்த துறை ஆராய்ச்சிக்கும் வழிகள் உருவாக உள்ளன.

இன்னொரு பக்கம், பங்கு சந்தையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொள்ளும் வர்த்தக வங்கிகள் தங்களது கையிருப்பு ரொக்கத்தை எப்படி கையாள்வதென, இதுவரை இருந்த அரசு சட்டத் திட்டங்கள் திருத்தப்பட்டு, 'இனி, அதெல்லாம் ரிசர்வ் வங்கியின் வரம்பும், பொறுப்பும்' என மாற்றப் போகிறார்கள். இதன்படி வங்கிகள் இனி அவர்களிடம் வைத்திருக்கும் குறைந்தபட்ச, அதிகபட்ச ரொக்க கையிருப்பு, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்கும் முன்ஜாக்கிரதை பிணைப் பணம் என்பதையெல்லாம் இனி அரசு நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்தாது. எனவே வலுவான வங்கிகள் கூடுதலாக பணத்தைத் தாங்களே கையாள அனுமதிக்கப்படும். நோஞ்சான்கள், ஏற்கெனவே போட்டியில் அடிபட்டு, வலுவான வங்கிகளுடன் இணைக்கப்படும் திட்டங்கள் உள்ளன. போட்டி நிறைந்த இன்றைய நாளில் கூடுதல் லாபம் காண பல வங்கிகளும் தங்களது கையிருப்பில் ஒரு பகுதியையாவது பங்கு சந்தைக்குத் திருப்பிவிடும். முந்தைய காலங்களில் போல எல்லாவற்றையும் தொழில்துறைக்கு கடனாகக் கொடுத்து Non performing Asset ஆக மாற்றி வைப்பது எந்த வங்கிக்கும் இனி சாத்தியமில்லை. அதனால் யாரெல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கடனைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கடன். மற்ற பணத்தை கையில் சும்மா வைத்திருக்க வாய்ப்பில்லை.

சரி, இவ்வளவு பணமும் இந்திய பங்கு சந்தைக்கு தேவையா என்றால் - நான் நினைப்பது தேவை மட்டுமல்ல; அவசியமும்கூட.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழிற்துறையில் மட்டுமின்றி, பங்குசந்தையிலும் அந்நிய நிறுவனங்கள் முதலிட அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் நீர்ஊற்று போல மெதுவாகத் தொடங்கிய இந்த முதலீடுகள் இன்று உருண்டு, திரண்டு வௌளம் போல பாய்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த பங்குசந்தை வர்க்கத்தில் கால் பகுதிக்கும் மேல் அந்நிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டது என்கின்றன புள்ளிவிபரங்கள். இந்தியாவின் அனைத்து நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், மற்ற நிறுவனங்கள், தனி முதலீட்டாளர்கள் என எல்லாரும் சேர்ந்தது மீதி பகுதி. எனவே இன்று நான்கில் ஒரு பங்குக்குமேல் வர்த்தக பங்கை கைக்குள் வைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு எதிர்குஷனாக பங்குசந்தையில் உள்நாட்டு முதலீடு தேவைதான்.

1990களின் இறுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் இங்கே நினைவு கூறத்தக்கவை. அந்நாட்களில் மேற்கண்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து, அவர்களது நாணய மதிப்பு உலக சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டு, பொருளாதாரம் படுத்துவிட்டது. அப்போது, அதற்கு காரணமாக கண்டறியப்பட்டது - அவர்களது அந்நிய முதலீட்டுக்கு ஈடாக உள்நாட்டில் சேமிப்பு இல்லாமல் போனது என்பதுதான். லாபம் கிடைக்கும்வரை இருந்த அந்த அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது 'வேலை' முடிந்தவுடன் ஒரே நேரத்தில் கடையை காலிசெய்ய... அதை சமாளிக்க அங்கே உள்நாட்டு மூலதனம் இல்லாததால் எல்லாம் ஆடிப்போனது. அப்போது ஏற்பட்ட பொருளாதார ரத்த வௌளத்தை உலகமே பரிதாபமாக பார்த்தது. அந்த நிலை, இன்று நமக்கும் ஏற்படாமல் இருக்க - நம் உள்நாட்டு சேமிப்பு அதிகரிக்க வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மற்றவர்களை அதிக சேமிப்பு வழக்கம் கொண்டவர்கள்தான். சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைய சூழல் நமது சேமிப்பை இன்னும் அதிக அளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.மு.கூ. அரசு பதவி ஏற்க இருந்த நாட்களில்... அடுத்த ஆட்சியின் நிச்சயமற்ற போக்கு நிலவியபோது... அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆட்சிதான் அடுத்து அமையும் என்ற தகவல்கள் கசிந்தபோது அந்நிய முதலீட்டாளர்கள் ஒருமுறை பின்வாங்கினர். அப்போது, இதுவரையான சரித்திரத்திலேயே இல்லாத அளவு ஒரே நாளில் 800 புள்ளிகள் வரை அதள பாதாளத்தில் பாய்ந்த பங்குசந்தை குறியீட்டெண், பின்னர் சமாளித்து 500+ புள்ளிகளில் அன்றைய தினத்தை முடித்தது. அன்றைய தினம் LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணம் பங்குசந்தைக்குள் கணிசமாகப் பாய்ந்ததால்தான் சிக்கல் அந்த அளவோடு அடங்கியது. இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும். எனவே இது போன்று எதிர்பாராத சம்பவங்களை சமாளிக்கவும் நாடு தயாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே கணிசமான பங்குசந்தை சார்ந்த முதலீடு இந்தியாவுக்கு தேவைதான். அதற்காகத்தான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக்கூட, ப.சிதம்பரம் பங்கு சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீட்டை ஊக்குவிக்கிறாரோ என்றும், மறுபுறம் இதைக் கொண்டு இந்திய தொழில்களையும், உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த எண்ணுகிறாரோ என்றும் நான் நினைக்கிறேன்.