இணையத்தில் எனக்கு இது 6வது வருஷம்; பத்திரிகையில் கிட்டத்தட்ட 12 வருஷம் முடிஞ்சிடுச்சு!
''சரி! அதுக்கு என்ன இப்ப?'' என்பது நியாயமான கேள்விதான்.
பதில் : நான் இணையத்துக்குள்ள வந்தபோது, இந்த அளவு இணையமும் வளர்ச்சி பெறவில்லை. நானும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருந்தன. 'அப்ப..., இப்ப எல்லாம் கத்துகிட்டாச்சா'ன்னு எதிர் கேள்வி, இப்ப வேணாம். ஆனா, இணையத்துக்கு வந்தபிறகு நான் கத்துக்கிட்டது நிறைய. அதுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாயிருந்த எல்லாருக்கும் ஒருமுறை நன்றி சொல்லிட்டு விஷயத்துக்கு போவோம்.
''12 வருஷம் பத்திரிகைக்காரனாயிருந்து என்ன சாதிச்சே!''
நாம நெனைக்கிறதையெல்லாம் எழுதணும்னா, இந்தமாதிரி Blog தேவைன்ற அவசியத்தை புரிஞ்சிக்கிட்டதுதாங்க!
இதை எப்படி புரிஞ்சிக்க போறாங்களோன்ற சந்தேகம் ஒண்ணு எனக்கு இப்பவே வருது. ஆனா அதுக்கு இப்ப விளக்கம் சொல்றது - 1. சிலருக்கு போரடிக்கும். 2. என் தரப்பையும் சரியா முன்வைக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பின்னாடி வருது பதில்!
எப்படியும் இனி வாரத்துக்கு - 2... 3... முறையாவது சந்திக்கலாம்னு தோணுது.
நான் Blogல தஞ்சம் புக காரணம்னா, ரெண்டு... மூணு பேரை முன்னோடின்னு சொல்ல விரும்பறேன்.
முதலாவது sify.com வெங்கடேஷ். 'நேசமுடன்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் இதழ் நடத்தினார். அவர் மட்டும்தான் அதில் எழுதுவார். அவரது அரசியல், சினிமா, புத்தக, சமூக விமர்சனங்கள்.... பார்வைகளின் தொகுப்பாக வந்து கொண்டிருந்தது. எதனாலோ கொஞ்ச நாட்களாக மெயில் வருவதில்லை.
இரண்டாவது நபர் பத்ரி. crickinfo தளத்தைச் சார்ந்து, எனக்கு அறிமுகமான இந்த பெயர் - பின்னர் இணையம் தொடர்பான பல விஷயங்களில் அவர் காட்டிய ஆர்வம்... 'கிழக்கு பதிப்பகம்' பெயரில் இப்போது எடுத்திருக்கும் இன்னொரு அவதாரம் போன்றவற்றால் பிரம்மாண்டம் பெற்றுள்ளது. இதற்கு மேல் அவரைப்பற்றி இங்கு பேசிக் கொண்டிருந்தால், அடிக்க வருவீர்கள்.
மூன்றாவது நபரும் உங்களுக்கு தெரிந்தவர்தான். தேசிகன். எழுத்தாளர் சுஜாதாவின் Official Biographer என்று அறியப்படுபவரும், மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவையை மௌள மௌள வலையேற்றியவருமான அதே நபர்தான். அவர் மகளுக்கு 'ஆண்டாள்' என்று பெயர் வைத்துள்ள வித்தியாசமான, கணிணி தொழில்நுட்ப விவர புருஷர். அது பற்றி ஒரு blog எழுதியே நல்ல வீச்சுக்கு உள்ளானவர்.
இவர்கள் மூவரும்தான் எனக்கு blog எழுத ஆவலைத் தூண்டிய மகா புருஷர்கள்.
ஆனால், 'Blogகா?... தேவையான்னு இன்னொருமுறை யோசித்து... அப்புறம் உன் இஷ்டம்' என்று உள்ளுக்குள் ஒரு விதமான அச்சத்தை உண்டாக்கிய இன்னொரு நபரும் உண்டு. எனது நண்பர் மனுஷ்யபுத்திரன். கூர்மையான உணர்வுகள் கொண்ட அவர், அண்மையில் உயிர்மை என்ற பெயரில் தொடங்கிய வலைப்பதிவு குறித்து எழுந்த கருத்து மோதல் - எனது நாற்காலி மட்டும் பூகம்பத்தை ஒருமுறை சந்திக்க வைத்தது. ஆனால் ஒரு விஷயம். இது போன்ற விஷயங்கள்தான் 'புலவர்களின் பரம்பரைச் சொத்து' என்ற வசனம் பழையதுதானே! என்ன... புலவர்களின் என்பதிலிருந்து இன்றைக்கு அதை இலக்கியவாதிகளின் என்று மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை, தனிப்பட்ட விரோதங்களுக்கு வித்திடாதவரை இந்த மாதிரியான கருத்து மோதல்கள் சரிதான். ஆனால் பல நேரங்களில் உணர்ச்சி பிழம்பாக பலரும் வெடிக்கும்போது எனக்கு கொஞ்சம்போல வருத்தம் என்பது உண்மைதான். நான் அந்த மாதிரியான ஆட்டத்துக்கு தயார் இல்லை. அதை இப்போதே நான் எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
தனிப்பட்ட தாக்குதல்களுக்கு, விமர்சனங்களுக்கு நான் தயாரில்லை. என் எழுத்தையும், கருத்தையும் ஏற்க முடியாதவர்கள் இருக்கலாம். அதை விமர்சிக்கலாம். அதற்கு நானும் - முடிந்தால் விளக்கமோ, இல்லையானால் வருத்தமோ தெரிவிக்கிறேன். விமர்சனம் எல்லை கடந்து போவதாக இருக்குமானால் இப்போதே சொல்கிறேன். எனது response ......... காதை செவிடாக்கிக் கொண்டு, 'வேறுபக்கம் என் பயணம்' என்று தொடர்வதுதான்.
சரி! இந்த blogல் எதைப் பற்றியெல்லாம் எழுதப் போகிறேன்? இந்த பெயர் 'நாலாவது கண்' என்றால் என்ன?
அறிமுகத்தின் ஆரம்பத்திலேயே சொன்னபடி.... நான் பத்திரிகையாளன் என்பதால் - இது ஒரு பத்திரிகையாளனனின் டைரி குறிப்பாக இருந்தால் ஆச்சரியப்பட முடியாது. The Hinduவில் வௌதயாகும் From reporter's diary போல, சுருக்கமாகவே எல்லா விஷயங்களையும் சொல்லிவிட முடியாது. மறுபுறம் எல்லா விஷயங்களிலும்... சில நேரங்களில் போதுமான தகவல் கிட்டாமையினால் கூட, விரிவாக கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்படும். அந்த மாதிரி நேரங்களில் சுருக்கமாகவே சில வரிகளில் முடித்துக் கொள்கிறேன்.
சமூகம், அரசியல், பொருளாதாரம், சினிமா போன்றவை அதிகமாகவும்.... அவ்வப்போது அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்வது திட்டம்.
''நாலாவது கண் ?''
சிவனின் 'நெற்றிக்கண்'ணை மூன்றாவது கண் என்று குறிப்பிடுகிறார்கள். அதில் ஒரு உக்கிர பார்வை, நெருப்பு கக்கும் தன்மை எல்லாம் உண்டு. ஆனால் நாலாவது கண் கட்டாயமாக அப்படியிருக்காது.
அடுத்து, ஜனநாயகத்தை காக்கும் 'நாலாவது தூண்' என்று பத்திரிகைகளைக் குறிப்பிடுகிறார்கள். 'நிஜமாகவா?' என்று கேட்டுக் கொள்வது பத்திரிகையாளனான நானேதான்? 12 ஆண்டு கால அனுபவத்தில் உளப்பூர்வமாக என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. இன்றைக்கு என் நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்தான் இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் கூட அதிகமிருக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது நிலை என்ன என்பது பற்றி உங்களுக்கு இன்னும் நிறையவே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதனால் இந்த நாலாவது கண், மூன்றாவது கண் மாதிரி உக்கிரத்தை வீசாது. அதே நேரத்தில் எதையாவது தாங்கிப் பிடிப்பதாக பாவ்லாவும் செய்யாது. மனத்தில் பதிந்த நிழலை மற்றவர்களும் பார்க்க பதித்துவிட்டுச் செல்வதுதான் நோக்கம். எப்போது என் 'கண்கள்' எதைப் பார்க்கப் போகின்றன? எதைத் தவறவிடப் போகின்றன என்பது இப்போது தெரியவில்லை.
இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். விரைவில் எனது மனதில் பதிந்த முதல் Pictureவுடன் பேசுவோம்.
''சரி! அதுக்கு என்ன இப்ப?'' என்பது நியாயமான கேள்விதான்.
பதில் : நான் இணையத்துக்குள்ள வந்தபோது, இந்த அளவு இணையமும் வளர்ச்சி பெறவில்லை. நானும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருந்தன. 'அப்ப..., இப்ப எல்லாம் கத்துகிட்டாச்சா'ன்னு எதிர் கேள்வி, இப்ப வேணாம். ஆனா, இணையத்துக்கு வந்தபிறகு நான் கத்துக்கிட்டது நிறைய. அதுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாயிருந்த எல்லாருக்கும் ஒருமுறை நன்றி சொல்லிட்டு விஷயத்துக்கு போவோம்.
''12 வருஷம் பத்திரிகைக்காரனாயிருந்து என்ன சாதிச்சே!''
நாம நெனைக்கிறதையெல்லாம் எழுதணும்னா, இந்தமாதிரி Blog தேவைன்ற அவசியத்தை புரிஞ்சிக்கிட்டதுதாங்க!
இதை எப்படி புரிஞ்சிக்க போறாங்களோன்ற சந்தேகம் ஒண்ணு எனக்கு இப்பவே வருது. ஆனா அதுக்கு இப்ப விளக்கம் சொல்றது - 1. சிலருக்கு போரடிக்கும். 2. என் தரப்பையும் சரியா முன்வைக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பின்னாடி வருது பதில்!
எப்படியும் இனி வாரத்துக்கு - 2... 3... முறையாவது சந்திக்கலாம்னு தோணுது.
நான் Blogல தஞ்சம் புக காரணம்னா, ரெண்டு... மூணு பேரை முன்னோடின்னு சொல்ல விரும்பறேன்.
முதலாவது sify.com வெங்கடேஷ். 'நேசமுடன்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் இதழ் நடத்தினார். அவர் மட்டும்தான் அதில் எழுதுவார். அவரது அரசியல், சினிமா, புத்தக, சமூக விமர்சனங்கள்.... பார்வைகளின் தொகுப்பாக வந்து கொண்டிருந்தது. எதனாலோ கொஞ்ச நாட்களாக மெயில் வருவதில்லை.
இரண்டாவது நபர் பத்ரி. crickinfo தளத்தைச் சார்ந்து, எனக்கு அறிமுகமான இந்த பெயர் - பின்னர் இணையம் தொடர்பான பல விஷயங்களில் அவர் காட்டிய ஆர்வம்... 'கிழக்கு பதிப்பகம்' பெயரில் இப்போது எடுத்திருக்கும் இன்னொரு அவதாரம் போன்றவற்றால் பிரம்மாண்டம் பெற்றுள்ளது. இதற்கு மேல் அவரைப்பற்றி இங்கு பேசிக் கொண்டிருந்தால், அடிக்க வருவீர்கள்.
மூன்றாவது நபரும் உங்களுக்கு தெரிந்தவர்தான். தேசிகன். எழுத்தாளர் சுஜாதாவின் Official Biographer என்று அறியப்படுபவரும், மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவையை மௌள மௌள வலையேற்றியவருமான அதே நபர்தான். அவர் மகளுக்கு 'ஆண்டாள்' என்று பெயர் வைத்துள்ள வித்தியாசமான, கணிணி தொழில்நுட்ப விவர புருஷர். அது பற்றி ஒரு blog எழுதியே நல்ல வீச்சுக்கு உள்ளானவர்.
இவர்கள் மூவரும்தான் எனக்கு blog எழுத ஆவலைத் தூண்டிய மகா புருஷர்கள்.
ஆனால், 'Blogகா?... தேவையான்னு இன்னொருமுறை யோசித்து... அப்புறம் உன் இஷ்டம்' என்று உள்ளுக்குள் ஒரு விதமான அச்சத்தை உண்டாக்கிய இன்னொரு நபரும் உண்டு. எனது நண்பர் மனுஷ்யபுத்திரன். கூர்மையான உணர்வுகள் கொண்ட அவர், அண்மையில் உயிர்மை என்ற பெயரில் தொடங்கிய வலைப்பதிவு குறித்து எழுந்த கருத்து மோதல் - எனது நாற்காலி மட்டும் பூகம்பத்தை ஒருமுறை சந்திக்க வைத்தது. ஆனால் ஒரு விஷயம். இது போன்ற விஷயங்கள்தான் 'புலவர்களின் பரம்பரைச் சொத்து' என்ற வசனம் பழையதுதானே! என்ன... புலவர்களின் என்பதிலிருந்து இன்றைக்கு அதை இலக்கியவாதிகளின் என்று மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை, தனிப்பட்ட விரோதங்களுக்கு வித்திடாதவரை இந்த மாதிரியான கருத்து மோதல்கள் சரிதான். ஆனால் பல நேரங்களில் உணர்ச்சி பிழம்பாக பலரும் வெடிக்கும்போது எனக்கு கொஞ்சம்போல வருத்தம் என்பது உண்மைதான். நான் அந்த மாதிரியான ஆட்டத்துக்கு தயார் இல்லை. அதை இப்போதே நான் எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
தனிப்பட்ட தாக்குதல்களுக்கு, விமர்சனங்களுக்கு நான் தயாரில்லை. என் எழுத்தையும், கருத்தையும் ஏற்க முடியாதவர்கள் இருக்கலாம். அதை விமர்சிக்கலாம். அதற்கு நானும் - முடிந்தால் விளக்கமோ, இல்லையானால் வருத்தமோ தெரிவிக்கிறேன். விமர்சனம் எல்லை கடந்து போவதாக இருக்குமானால் இப்போதே சொல்கிறேன். எனது response ......... காதை செவிடாக்கிக் கொண்டு, 'வேறுபக்கம் என் பயணம்' என்று தொடர்வதுதான்.
சரி! இந்த blogல் எதைப் பற்றியெல்லாம் எழுதப் போகிறேன்? இந்த பெயர் 'நாலாவது கண்' என்றால் என்ன?
அறிமுகத்தின் ஆரம்பத்திலேயே சொன்னபடி.... நான் பத்திரிகையாளன் என்பதால் - இது ஒரு பத்திரிகையாளனனின் டைரி குறிப்பாக இருந்தால் ஆச்சரியப்பட முடியாது. The Hinduவில் வௌதயாகும் From reporter's diary போல, சுருக்கமாகவே எல்லா விஷயங்களையும் சொல்லிவிட முடியாது. மறுபுறம் எல்லா விஷயங்களிலும்... சில நேரங்களில் போதுமான தகவல் கிட்டாமையினால் கூட, விரிவாக கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்படும். அந்த மாதிரி நேரங்களில் சுருக்கமாகவே சில வரிகளில் முடித்துக் கொள்கிறேன்.
சமூகம், அரசியல், பொருளாதாரம், சினிமா போன்றவை அதிகமாகவும்.... அவ்வப்போது அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்வது திட்டம்.
''நாலாவது கண் ?''
சிவனின் 'நெற்றிக்கண்'ணை மூன்றாவது கண் என்று குறிப்பிடுகிறார்கள். அதில் ஒரு உக்கிர பார்வை, நெருப்பு கக்கும் தன்மை எல்லாம் உண்டு. ஆனால் நாலாவது கண் கட்டாயமாக அப்படியிருக்காது.
அடுத்து, ஜனநாயகத்தை காக்கும் 'நாலாவது தூண்' என்று பத்திரிகைகளைக் குறிப்பிடுகிறார்கள். 'நிஜமாகவா?' என்று கேட்டுக் கொள்வது பத்திரிகையாளனான நானேதான்? 12 ஆண்டு கால அனுபவத்தில் உளப்பூர்வமாக என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. இன்றைக்கு என் நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்தான் இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் கூட அதிகமிருக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது நிலை என்ன என்பது பற்றி உங்களுக்கு இன்னும் நிறையவே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதனால் இந்த நாலாவது கண், மூன்றாவது கண் மாதிரி உக்கிரத்தை வீசாது. அதே நேரத்தில் எதையாவது தாங்கிப் பிடிப்பதாக பாவ்லாவும் செய்யாது. மனத்தில் பதிந்த நிழலை மற்றவர்களும் பார்க்க பதித்துவிட்டுச் செல்வதுதான் நோக்கம். எப்போது என் 'கண்கள்' எதைப் பார்க்கப் போகின்றன? எதைத் தவறவிடப் போகின்றன என்பது இப்போது தெரியவில்லை.
இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். விரைவில் எனது மனதில் பதிந்த முதல் Pictureவுடன் பேசுவோம்.